News

Wednesday, 14 April 2021 10:24 AM , by: KJ Staff

Credit : Daily Thandhi

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்ப் புத்தாண்டு இன்று (சித்திரை 1) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர்எடப்பாடி பழனிசாமி (CM Edapaddy Palanisamy), துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழகத்து சகோதர, சகோதரிகளுக்கும், உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும். புத்தாண்டு, ஒவ்வொருவரின் வாழ்விலும், ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மகிழ்ச்சியையும் நிறைக்க, இந்த மகிழ்ச்சியான திருநாளில் பிராத்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

முக்கனிகளுடன் வழிபாடு

உலகம் முழுவதும் வசித்து வரும் தமிழர்கள் சித்திரை முதல் நாளில், தமிழ் புத்தாண்டை மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளுடன் வழிபாடு செய்து கொண்டாடுகிறார்கள். சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு கொண்டாடும் இந்த பருவத்தில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளும் கிடைக்கும் பருவமாகவும் இருக்கிறது. அதனால், மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளை ஒரு தட்டிலும், நாணயங்கள், தங்கம், வெள்ளி நகைகள், கண்ணாடி, பூக்கள், ஆகியவை வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. இது வருகிற ஆண்டில் தனிப்பட்ட வாழ்க்கையிலும், குடும்பத்திலும் நல்ல அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் ஏற்படுத்தும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

இலாபகரமாக மாட்டுப்பண்ணையை வழிநடத்த சில டிப்ஸ்!

கொரோனா வைரஸ் பரவல் அச்சம்! தடுப்பூசி போடுவோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)