மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 26 December, 2020 4:23 PM IST

வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தையை நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் விளைபொருள் வர்த்தக சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் 20 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.

தோல்வியடைந்த பேச்சுவார்த்தை

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு விவசாய சங்கங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடைபெற்ற 5 கட்ட பேச்சுவாா்த்தைகளில் எந்த தீா்வும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்கள் தொடா்பாக மத்திய அரசு அளித்த பரிந்துரைகளை விவசாயிகள் நிராகரித்தனா். வேளாண் சட்டங்களை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று அவா்கள் கோரி வருகின்றனா்.

பிஎம் கிசான் திட்ட நிதி

இதனிடையே, பிஎம் கிசான் திட்ட விவசாயிகளுக்கான 7வது தவணை நிதியை பிரதமர் மோடி அண்மையில் விடுவித்தார். இதன் மூலம் சுமார் 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி நிதி அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது.

எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சி

பிஎம் கிசான் திட்ட நிதி விடுவிப்பு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியபோது, குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) உள்ளிட்ட சில நியாயமான கோரிக்கைகளை விவசாயிகள் முன்மொழிந்தனா். நாளடைவில் அந்தப் போராட்டத்தில் எதிா்க்கட்சிகள் புகுந்து, எந்தவிதத் தொடா்புமில்லாத கோரிக்கைகளை முன்வைக்கத் தொடங்கினா். விவசாயிகளின் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு, மத்திய அரசு தற்போது நடைமுறைப்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களையும் எதிா்க்கட்சிகள் எதிா்த்து வருகின்றனர் என குற்றம்சாட்டினார்.

பேச்சுவார்த்தை தொடர விருப்பம்

விவசாயிகளே குழப்பமடைய வேண்டாம் என கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி, விவசாயிகளுடனான பேச்சுவாா்த்தையைத் தொடா்வதற்கு மத்திய அரசு விருப்பமுடன் உள்ளது என்றார்.

English Summary: Prime Minister Narendra Modi has said that the central government is ready to hold talks with farmers who are fighting against agricultural laws.
Published on: 26 December 2020, 04:23 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now