மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 3 April, 2021 10:13 AM IST
Credit : Hindu Tamil

மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கிராமத்தில், உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண்மை கல்லூரி மாணவிகள் முகாமிட்டுள்ளனர். இவர்கள் இப்பகுதியில் உள்ள விவசாயிகளை நேரடியாக சந்தித்து விவசாயம் குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர். வேளாண் கல்லூரி மாணவர்களின் இந்த செயல் விளக்கப் பயிற்சி, அனைத்து விவசாயிகளுக்கும் உதவிகரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

தென்னையில் வேரூட்டம்

வேளாண் மாணவர்களின் இந்த செயல் விளக்கப் பயிற்சியில், தென்னையின் வேரூட்டம் (Coconut root) குறித்து செயல் விளக்கம் அளித்தனர். தென்னை மரங்களில் நோய்களை கட்டுப்படுத்தவும், மகசூலை அதிகரிக்கவும் (High Yield) தென்னையில் வேரூட்டம் செய்வது அவசியமானது. ஒரு மரத்திற்கு வேரூட்டம் டானிக் 200 மில்லி வீதம் வருடத்திற்கு இரண்டு முறை செலுத்த வேண்டும் என்று மாணவிகள் தெரிவித்தனர். இதன் மூலம் வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தென்னை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு (Awareness) அதிகரிக்கும். அதோடு, தென்னையில் வேரூட்டம் செய்து, மகசூலை அதிகரிக்கும் வழிமுறைகளை விவசாயிகள் தெளிவாக அறிந்து கொண்டனர்.

வண்ண ஒட்டு பொறிகள்

இதே போல் செல்லம்பட்டி ஒன்றியம், ஜோதிமாணிக்கத்தில் வண்ண ஒட்டு பொறிகளின் பயன்கள் குறித்து பயிற்சி முகாம் நடந்தது. இதில் வேளாண் கல்லூரி மாணவிகள் அமல் பிரிசில்லா, பிந்தியா, பிரியதர்ஷினி, ஹீர விலாஷினி ஆகியோர் பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்து ஏக்கருக்கு 5 மஞ்சள் மற்றும் நீலவண்ண அட்டை ஒட்டும் பொறிகளை வயல்களில் பயன்படுத்தும் முறையை விவசாயிகளுக்கு செய்து காண்பித்தனர். இம்முறையைப் பயன்படுத்தினால், பூச்சிகளின் தாக்குதல் குறைந்து மகசூல் (Yield) அதிகரிக்கும்.

விழிப்புணர்வு:

வேளாண் கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் கூடுதல் வருமானம் பெறவும், நோய்க்கட்டுப்பாட்டைத் தவிர்க்கவும் பல்வேறு பயிற்சிகளை (Training) செயல் விளக்கத்துடன் அளித்து வருகின்றனர். விவசாயிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, பயிற்சி பெறுகின்றனர். நோய்க்கட்டுப்பாடு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, கூடுதல் வருமானம் பெறும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட வேண்டும். சரியான விழிப்புணர்வு (Awareness) தான் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவும். அந்த வகையில் வேளாண் கல்லூரி மாணவர்களின் முயற்சி வரவேற்கத்தக்கது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

உலகின் விலை உயர்ந்த காய்கறியை விவசாயம் செய்த இந்திய விவசாயி! ஒரு கிலோ ரூ.85,000!

தமிழகத்தில் விளையும் மஞ்சள் இரகங்கள் என்னென்ன?

English Summary: Process explanation for farmers about rooting in coconut!
Published on: 03 April 2021, 10:13 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now