மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 May, 2022 4:41 PM IST
Paddy procurement

செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் 92 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடமிருந்து 11 கோடி கிலோ நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நெல் விற்ற அனைத்து விவசாயிகளுக்கும் சேர்த்து மொத்தமாக 187 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

நெல் கொள்முதல் (Paddy Procurement)

செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய தாலுகாக்களில் நெல் அதிகளவில் விளை விக்கப்படுகிறது. விவசாயிகள் அறுவடை செய்யும் நெல், மூட்டைகளாக கட்டப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தின் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், 92 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படுகின்றன.

அச்சிறுப்பாக்கத்தில் 19; மதுராந்தகம் 21; சித்தாமூர் 15; திருக்கழுக்குன்றம் 14; திருப்போரூர் 10; பவுஞ்சூர் 9; காட்டாங்கொளத்துாரில் என மொத்தம் 92 நிலையங்களில் நெல் கொள்முதல் செயல்படுகின்றன.

விவசாயிகளிடம் சன்ன ரகம் கிலோ 20.60 ரூபாய், குண்டு ரகம் நெல் 20 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. 40 கிலோ மூட்டை 800 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது. மழையில் நனைந்து இருந்தால் காயவைத்த பின் அதே விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் மூட்டைகள், மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம், அண்டவாக்கம், திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கம் ஆகிய இடங்களில், தற்காலிக தானிய கிடங்குகளில் சேமிக்கப்படுகின்றன.

இவற்றில் ஆறு கோடி கிலோ நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க இடவசதி உள்ளது. இதில், சிலாவட்டம் தானிய கிடங்கில், 2.30 கோடி கிலோ நெல் மூட்டைகள் முழு கொள்ளளவில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது அண்டவாக்கம், கீரப்பாக்கம் ஆகிய தானிய கிடங்குகளில், நெல் மூட்டைகள் நிரப்பப்பட்டு வருகின்றன.மாவட்டத்தில் 15 ஆயிரத்து 910 விவசாயிகளிடமிருந்து 11 கோடி கிலோ நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நெல் மூட்டைகள் விற்ற விவசாயிகளுக்கு 187 கோடி ரூபாய் விநியோகம்
செய்யப்பட்டுள்ளது.

விநியோகம் (Distribution)

இந்த நெல் மூட்டைகள், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு, இரயில்கள் வாயிலாக அனுப்பப்படுகின்றன. தவிர செங்கல்பட்டு மாவட்டத்தில், 25 தனியார் அரவை ஆலைகளுக்கு, 2.5 கோடி கிலோ நெல் மூட்டைகள் அனுப்பப்பட்டு உள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு 1 கோடி கிலோ; தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இரு மாவட்டங்களுக்கு, 60 லட்சம் கிலோ நெல் மூட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில், சில நாட்களாக மழை வருவதால், நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் குவித்து வைத்துள்ள நெல் மூட்டைகள் உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில், 20 கோடி கிலோ நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 11 கோடி கிலோ நெல், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதலுக்கேற்ப விவசாயிகளுக்கு 187 கோடி ரூபாய் வழங்கி உள்ளோம். இன்னும் ஆறு கோடி கிலோ நெல் கொள்முதலுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்.

மேலும் படிக்க

வேளாண் ஏற்றுமதி முனையம்: பல லட்சம் கிலோ விளை பொருட்களை சேமிக்கலாம்!

சிறையில் நடந்த அறுவடை திருவிழா: சிறைவாசிகள் அசத்தல்!

English Summary: Procurement of 11 crore kg of paddy: Distribution to districts!
Published on: 18 May 2022, 04:41 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now