மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 23 November, 2020 8:46 AM IST
Credit : Hindu Tamil

கொரோனா காலத்தில் பல்வேறு களப்பணியாளர்கள், தன்னார்வலர்கள் (Volunteers) , சமூக அமைப்புகள் நகர்ப்புற ஏழை எளியோருக்கு உதவினர். அந்நேரம் மலைப்பகுதியில் வாழும் விவசாய மக்களைப் பற்றி நாம் சிந்தித்திருக்க மாட்டோம். அவர்களுக்கும் உதவி செய்யும் பொருட்டு மலைகளுக்கு பயணம் மேற்கொண்டு உதவிகளை செய்து வருகிறார் பழநி கல்லுாரி பேராசிரியர் தமிழ்நாயகம்.

மலைவாழ் விவசாய மக்களுக்கு உதவி:

பதினைந்து ஆண்டுகளாக பழநி அருகே அணைக்கட்டுகள், நீர்நிலைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களை இளைஞர்கள், வனத்துறையினருடன் (Forest Department) இணைந்து துாய்மைப்படுத்தி வருகிறார் தமிழ்நாயகம். ஊரடங்கு காலத்தில் மலைப்பகுதிகளில் சிரமப்படும் விவசாய மக்களுக்கு உதவுமாறு வனத்துறையினர் இவரிடம் கேட்டனர். இதையடுத்து சேவை அமைப்பான "சேவாபாரதி"க்கு (Sevabharati) தமிழ்நாயகம் கோரிக்கை விடுத்தார். அவர்கள் அளித்த நிவாரணப் பொருட்களுடன், வனத்துறை, வருவாய் துறை மற்றும் சத்தியமங்கலம் அதிரடிப்படையினரின் தலைமையில் சேவையை துவக்கினார். மொத்தமுள்ள 80 மலைக்கிராமங்களில் 47 கிராமங்களுக்கு உணவுப் பொருள், போர்வை, துண்டு, சேலை என தேவையானவற்றை வழங்கினார்.

விதைப்பந்து வீசுதல், மரம் நடுதல்:

வனத்துறையினர் உடன் இணைந்து காடுகளில் விதைப்பந்து வீசுதல், மரம் நடுதல் (Plant trees) போன்றவற்றிலும் ஈடுபட்டுள்ளார். இது போன்ற சேவை காரியங்களைக் கண்ட, சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள், தேசபக்தர்கள் அனைவரும் சேவாபாரதி மூலம் மலைக் கிராமத்தினருக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

தமிழ்நாயகம் கூறியது:

நான் ஒருங்கிணைப்பு பணி மட்டுமே மேற்கொண்டு வருகிறேன். கொடைக்கானலை சுற்றி 20 மாவட்ட விவசாயிகள், மக்கள், இந்தமலையையே நம்பி உள்ளனர். நீர் ஆதாரத்தின் மூலமாக விளங்கும் கொடைக்கானல் மலையை, பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பதன் மூலம் நீராதாரத்தை பெருக்க முடியும் என்றார்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

மத்திய அரசின் இலவச அரிசியை வாங்கி விட்டீர்களா? காலக்கெடு முடியப் போகிறது!

இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே அறியும் ஐந்தறிவு ஜீவன்கள்!

மண்வளத்தை மீட்டெடுக்க சுழற்சி முறை விவசாயத்தை கையிலெடுங்கள்!

English Summary: Professor Tamilnayakam to help hill farmers!
Published on: 22 November 2020, 09:21 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now