சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 8 April, 2025 5:11 PM IST

தேசிய விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மத்திய நிதியுதவி அம்சங்களில் ஒன்றான வேளாண் இயந்திரமயமாக்கல் துணைத் திட்டம் மாநில அரசுகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், அறுவடைக்குப் பிந்தைய பணிகளுக்காக தொழில்நுட்பங்கள் உட்பட பல்வேறு விவசாய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை தனிப்பட்ட உரிமையின் அடிப்படையில் விவசாயிகள் வாங்குவதற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

விவசாயிகளின் தேவைகளுக்கு ஏற்ப வாடகை அடிப்படையில் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவதற்காக வாடகை மையங்கள், கிராம அளவிலான பண்ணை இயந்திர வங்கிகளை அமைப்பதற்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது. விவசாய நிலங்களில் ட்ரோன்களை பயன்படுத்துதல் மற்றும் வாங்குதல் உள்ளிட்ட சேவைகளை வழங்குவதற்காக விவசாய ட்ரோன் வாடகை மையங்களை அமைக்கவும் நிதியுதவி வழங்கப்படுகிறது.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வாழ்வாதார உதவியை வழங்கும் நோக்கில், 3 ஆண்டுகளுக்கு (2023-24 முதல் 2025-26 வரை) 15,000 ட்ரோன்களை வழங்குவதற்காக ட்ரோன் சகோதரி திட்டத்தை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது.

2024 செப்டம்பரில் ரூ.2817 கோடி ஒதுக்கீட்டில் டிஜிட்டல் வேளாண் இயக்கத்தைச் செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் தொடர்பான தகவல்களை சரியான நேரத்தில் மற்றும் நம்பகமான முறையில் கிடைக்கச் செய்வதற்கும் வலுவான டிஜிட்டல் விவசாய சுற்றுச்சூழல் அமைப்பை செயல்படுத்துவதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும்.

மாநிலங்களவையில் கேள்வி ஓன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் இணையமைச்சர் திரு ராம்நாத் தாக்கூர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Read more:

வேளாண் வளர்ச்சியை முதன்மை நோக்கமாக கொண்டு சிறப்பு திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும்: அன்புமணி

மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள்

English Summary: Promotion of New Technologies in Agriculture
Published on: 08 April 2025, 05:11 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now