News

Thursday, 10 February 2022 11:30 AM , by: R. Balakrishnan

PSLV-C52 Rocket

மூன்று செயற்கைக் கோள்களுடன், 'பி.எஸ்.எல்.வி., - சி52' ராக்கெட், வரும் 14 ஆம் தேதி விண்ணில் பாய்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான 'இஸ்ரோ' (ISRO) பூமியை கண்காணிக்க, 'இ.ஓ.எஸ். 04' என்ற செயற்கை கோளை, உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரித்து உள்ளது. இதன் எடை 1,780 கிலோ. இந்த செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி., - சி52 ராக்கெட் வாயிலாக, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

பி.எஸ்.எல்.வி. - சி52 ராக்கெட் (PSLV - C52 Rocket)

இந்த செயற்கை கோளுடன், இரண்டு சிறிய செயற்கை கோள்களும் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. 'வரும் 14ம் தேதி காலை 5:59 மணிக்கு, பி.எஸ்.எல்.வி. - சி52 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும்' என இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்தன.

நடப்பு ஆண்டில் இஓஎஸ்-4 ரிசாட்-1ஏ மற்றும் இஓஎஸ்-6 ஓசோன் சாட்-3 ஆகிய 2 செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி ரக ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ராக்கெட் மூலம் இஓஎஸ்-4 உட்பட 3 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்ப இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

1710 கிலோ எடை கொண்ட ரிசாட்-1ஏ என்னும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள், மாணவர் செயற்கைக்கோளான இன்ஸ்பைர்சாட்-1 மற்றும் தொழில்நுட்ப விளக்கக் செயற்கைக்கோளான ஐஎன்எஸ்-2டிடி ஆகிய 3 செயற்கைகோள்களும் பிஎஸ்எல்வி - சி52 ராக்கெட் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட உள்ளது.

மேலும் படிக்க

தமிழுக்கு முக்கியத்துவம்: அமெரிக்காவில் உதயமானது வள்ளுவர் தெரு!

சர்வதேச தலைவர்கள் பட்டியல்: பாரதப் பிரதமர் மோடிக்கு முதலிடம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)