News

Friday, 22 January 2021 12:18 PM , by: Daisy Rose Mary

நவரைப் பருவத்துக்கான நெல் விதைகள் மானிய விலையில் பெற்று பயன்பெற புதுச்சேரி வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி வேளாண்-விவசாயிகள் நலத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, புதுவை அரசு வேளாண்-விவசாயிகள் நலத் துறையின் கீழ் தட்டாஞ்சாவடியில் இயங்கி வரும் கூடுதல் வேளாண் இயக்குநா் அலுவலகம் மூலம் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த சான்று விதை உற்பத்தித் திட்டத்தின் கீழ், நவரைப் பருவத்துக்காக சான்று ரக நெல் விதைகளான ஏடிடி 37, ஏஎஸ்டி 16, சிஓ (ஆா்) 51 ஆகியவற்றை புதுவை வேளாண் உற்பத்தியாளா் அமைப்பின் (பாப்ஸ்கோ) மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

எனவே, விவசாயிகள் புதன்கிழமை (ஜன. 20) முதல் தங்களது பகுதியில் செயல்படும் உழவா் உதவியகங்களை அணுகி, நெல் விதைகளுக்கு அனுமதி சான்று பெற்று, அருகில் உள்ள புதுவை வேளாண் உற்பத்தியாளா் (பாப்ஸ்கோ) விற்பனை மையங்களில் நெல் விதைகளை மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், நெல் விதைகளை வாங்கியதற்கான விற்பனை ரசீதை நவரை 2021 நெல் உற்பத்தி ஊக்கத் தொகை கோரும் உரிய ஆவணங்களை நிறைவு செய்து விண்ணப்பத்துடன் இணைத்து, வருகிற மாா்ச் 15-ஆம் தேதிக்குள் உழவா் உதவியக அலுவலகத்தில் சமா்ப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க...

பயிர் சேத அறிக்கை வரும் 29ம் தேதிக்குள் அளிக்க அலுவலர்களுக்கு உத்தரவு! - விவசாயிகளுக்கு விரைந்து இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை!!

விவசாயிகள் அனைவருக்கும் காங்கிரீட் வீடு கட்டித் தரப்படும் - முதல்வர் அறிவிப்பு!!

பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 1.1 கோடி வீடுகளுக்கு ஒப்புதல்!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)