punjab cm Bhagwant Mann present sarkar kisan milni program
பண்ணை வருமானத்தை இரட்டிப்பாக்க புதிய சோதனைகளை முயற்சிக்குமாறு விவசாயிகளுக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வலியுறுத்தியுள்ளார்.
பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தில் அரசு மற்றும் விவசாயிகளுக்கு இடையிலான முதல் 'சர்கார்-கிசான் மில்னி' கூட்டத்தில் அம்மாநில முதல்வர் பகவந்த் மான் பங்கேற்று விவசாயிகளிடம் உரையாடினார்.
அப்போது விவசாயிகளுக்கு தனது அரசாங்கத்தின் சார்பில் முழு ஆதரவு வழங்கப்படும் என உறுதியளித்தார். விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க புதிய சோதனைகளை முயற்சிக்குமாறு தனது உரையில் குறிப்பிட்டார்.
தற்போது நிலவும் விவசாய நெருக்கடியில் இருந்து விவசாயிகளை மீட்டெடுப்பதே உடனடித் தேவை என குறிப்பிட்ட பகவந்த் மான், இடுபொருள் செலவுகள் அதிகரிப்பு மற்றும் வருமானம் குறைவதால் விவசாயம் இனி லாபகரமான தொழிலாக இல்லை என்றார். இதனால், மாநில விவசாயிகள் குறுக்கு வழியில் செல்வதாக தெரிவித்தார்.
பாரம்பரிய விவசாய முறைகளை கைவிடுக :
விளைப்பொருட்களின் விலையினை நிர்ணயிப்பவர்களுக்கும்- பங்குதாரர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதே இந்த கூட்டத்தின் ஒரே நோக்கம் என்று மான் கூறினார். அரசின் கொள்கைகள் விவசாயிகளின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. அதிக லாபம் ஈட்ட விவசாயிகள் பாரம்பரிய விவசாய முறைகளை கைவிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மாற்றுப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) விவகாரத்தில் மாநில அரசு ஏற்கனவே இந்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், MSP ஆனது விவசாயிகளுக்கு வருமானத்தை கூடுதலாக்கவும், மரக்கன்றுகளை எரிப்பதில் இருந்து அவர்களை விலக்கவும் உதவும் என தெரிவித்து உள்ளார்.
மாநில அரசு உணவு பதப்படுத்தும் துறையிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது, விரைவில் மாநிலத்தில் கரும்பு, லிச்சி, பூண்டு, கினோ மற்றும் பிற பழங்களுக்கான பதப்படுத்தும் ஆலைகளை நிறுவும் என்றார்.
பாஸ்மதி உற்பத்திக்கு முக்கியத்துவம் :
மானின் கூற்றுப்படி, நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மொத்த பாஸ்மதியில் 80% பஞ்சாப் உற்பத்தி செய்கிறது. வரும் நாட்களில் அதன் உற்பத்தி அதிகரிக்கப்படும், இது பாஸ்மதி தொழில்துறையை உயர்த்தும். விவசாயிகளின் வருமானத்திற்கு துணைபுரியும் மற்றும் இயற்கை வளத்தை பாதுகாக்கும் என்று அவர் கூறினார்.பாஸ்மதி அரிசியை பயிரிடுமாறு மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளை வலியுறுத்திய மான், பயிரை வளர்த்து, அதற்கான நியாயமான விலையைப் பெறுவதற்கு தனது அரசின் ஆதரவு இருக்கும் என உறுதியளித்தார்.மேம்பட்ட சாகுபடிக்கு கால்வாய் நீரைப் பயன்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும், அதற்காக மாநிலத்தின் நீர்ப்பாசன வலையமைப்பு மேம்படுத்தப்படும் என்றும் மான் கூறினார். ஒவ்வொரு கிராமத்திற்கும் தண்ணீர் சென்றடைவதை உறுதி செய்ய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்றார்.
அரசு அதிகாரிகள், துணை ஆணையர்கள் மற்றும் கூடுதல் துணை ஆணையர்கள் தங்கள் களப் பயணத்தை, குறிப்பாக கிராமங்களுக்குச் சென்று, மக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் பகவந்த் மான் வலியுறுத்தினார். கூட்டத்தில் சுமார் 15,000 விவசாயிகள் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:
ஜி-20 உச்சி மாநாடு மத்திய அமைச்சர் சிறப்புரை
விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி எப்போது ? கைவிரித்த ஒன்றிய அரசு