மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 4 July, 2021 8:20 AM IST
Credit : Dinamalar

வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே தரமான மருத்துவ வசதி என்று இல்லாமல், அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைப்பதை, அரசு உறுதி செய்ய வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

காப்பீடு வசதி இல்லை

கொரோனா மையங்களில், தரமற்ற உணவு வழங்கப்படுவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், முத்துகண்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில் மருத்துவ வசதிகள் இருந்தும், கொரோனா (Corona) பாதிப்பால் ஏற்பட்ட மரணங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். நோய் தொற்று காலத்தில், அதிகமாக செலவு செய்ய முடியாதவர்களால், தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற முடியவில்லை. அவர்களுக்கு காப்பீடு வசதியும் இல்லை.

இது குறித்து, விரிவான ஆய்வு தேவை. அரசு தரப்பிலும் தெளிவான கொள்கை வகுக்கப்பட வேண்டும். மருத்துவ வசதிகளை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், அரசு மருத்துவ மனைகளில் வழங்கப்படும் உணவும், விரும்பும் வகையில் இருக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில், உணவு வழங்குவதற்கான ஒப்பந்தம் வழங்குவதில், சந்தேகம் எழுவது வழக்கம். குறைவான தொகையை குறிப்பிட்டு ஒப்பந்தம் பெற்று, கலோரி (Calory) குறைந்த உணவு வழங்குவதும் நடக்கிறது. மருத்துவ வசதிகளை பொறுத்தவரை, சர்வதேச அளவிலான மாதிரிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கண்காணிப்பு :

ஜெர்மனியில், அரசு கட்டுப்பாட்டிலான மருத்துவமனைகள் இல்லை. ஆனால், தனியார் அளிக்கும் மருத்துவ வசதிகள் அனைத்தும் கண்காணிக்கப்படுகின்றன. வசதியானவர்களுக்கு மட்டுமே தரமான மருத்துவ வசதிகள் என்று இல்லாமல், சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் மருத்துவ வசதிகள் கிடைப்பதை, அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. விசாரணையை, 30ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

மேலும் படிக்க

கொரோனாவை கட்டுப்படுத்த செப்டம்பர் மாதத்திற்குள் 10% மக்களுக்கு தடுப்பூசி: உலக சுகாதார அமைப்பு!

2020 ஆம் ஆண்டில் 4-இல் ஒருவருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை: யுனிசெப் தகவல்

English Summary: Quality medical care for all: High court advises government to ensure!
Published on: 04 July 2021, 08:20 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now