நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 November, 2022 1:00 PM IST
Railway Recruitment 2022: Last date to apply is February 16!

ரயில்வே ஆட்சேர்ப்பு 2022 : வேலை தேடுபவர்களுக்கான நல்ல செய்தியாகும். மத்திய ரயில்வேயின் ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு (RRC/CR) ஏராளமான காலியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் படிக்கலாம்.

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, வெல்டர்கள், பெயிண்டர்கள், எலக்ட்ரீஷியன்கள், ஃபிட்டர்ஸ், கார்பெண்டர்கள், டெய்லர்கள், லேபரேட்டரி அசிஸ்டெண்ட்ஸ் மற்றும் டர்னர்ஸ் ஆகிய பணிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ரயில்வே ஆட்சேர்ப்பு 2022 விவரங்கள் (Details of Railway Recruitment 2022:)

மும்பை கிளஸ்டர்: சுமார் 1650

புசாவல் கிளஸ்டர்: சுமார் 410

புனே கிளஸ்டர்: சுமார் 150

நாக்பூர் கிளஸ்டர்: சுமார் 110

சோலாப்பூர் கிளஸ்டர்: சுமார் 75

மொத்தம் – 2000த்திற்கும் மேர்பட்ட பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க கீழே படிக்கவும்.

ரயில்வே ஆட்சேர்ப்பு 2022 இன் கல்வித் தகுதி (Educational Qualification of Railway Recruitment 2022)

ரயில்வே ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வில் அல்லது அதற்கு சமமான (10 + 2 தேர்வு முறை) குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள், தொழிற்பயிற்சிக்கான தேசிய கவுன்சில் அல்லது தொழில் பயிற்சிக்கான மாநில கவுன்சில் வழங்கிய, அறிவிக்கப்பட்ட வர்த்தகத்தில் தேசிய வர்த்தகச் சான்றிதழையும் பெற்றிருக்க வேண்டும்.

ரயில்வே ஆட்சேர்ப்பு 2022க்கான வயது வரம்பு (Age Limit for Railway Recruitment 2022)

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர் ஜனவரி 17, 2022 அன்று 15 வயது முதல் 24 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

ஒதுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

ரயில்வே ஆட்சேர்ப்பு 2022 க்கு எப்படி விண்ணப்பிப்பது ? (How to Apply for Railway Recruitment 2022)

தகுதியும் விருப்பமும் உள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்குமாறு அறுவுறுத்தப்படுகிறார்கள்: https://www.rrccr.com/

ரயில்வே ஆட்சேர்ப்பு 2022 க்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி எப்போது? (Last Date to apply)

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 16, 2022 மாலை 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

ரயில்வே ஆட்சேர்ப்பு 2022 பற்றிய தகவல்

இந்திய ரயில்வேயில் ஃபிட்டர்கள், வெல்டர்கள், கார்பெண்டர்கள், பெயிண்டர்கள், டெய்லர்கள், ஆய்வக உதவியாளர்கள் போன்ற பல்வேறு பிரிவுகளில் 2000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை எனவே இந்த பணியிடங்களை நிரப்ப, ஆட்சேர்ப்பு நடக்கும். அதனால் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே கடைத்தேதி வரை காத்திருக்காமல், விண்ணப்பிக்க முந்துங்கள்.

மேலும் படிக்க:

Paneer: பன்னீரை சமைத்து சாப்பிடுவது நல்லதா?

ரேஷன் கடைகளில் தானியங்கள் விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவு!

English Summary: Railway Recruitment 2022: Last date to apply is February 16!
Published on: 28 January 2022, 05:24 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now