மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 6 September, 2019 11:26 AM IST

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கான எச்சரிக்கையும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வளிமண்டலத்தின் மேலடுக்கில் ஏற்பட்டுள்ள காற்றின் சங்கமம் மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் பரவலான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு வங்கக் கடலில்  45 முதல் 50 கிலோ.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீனவர்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் வட்டங்களில் கடந்த 2 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழை தொடர்ந்து நீடிக்கிறது. திற்பரப்பு சுற்று வட்டாரத்தில் 10 செ.மீ  அளவுக்கு மழை பெய்திருப்பதால் அணைகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. 

சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிக பட்ச மழை பொழிவாக நீலகிரி மாவட்டம் கூடலூரில் 15 செ.மீ மழையும், நடுவட்டத்தில் 11 செ.மீ மழையும், கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 9 செ.மீ மழையும்,  கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில்  5 செ.மீ மழையும், நெல்லை மாவட்டம் பாபநாசம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தலா 4 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. 

விடாது பெய்து வரும் கனமழை

தென் மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக மீண்டும் மும்பையில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்கள் தண்ணீர் காடாக காட்சியளிக்கிறது. நேற்று ஒரே நாளில் 22 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சயன், கிங் சர்க்கஸ் ரயில் நிலையம், காந்தி மார்க்கெட், பாலகர் ஆகிய இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.  போக்குவரத்து, ரயில் சேவை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

https://tamil.krishijagran.com/news/heavy-showers-in-western-ghats-for-next-few-days-red-alert-continous-rainfall-mumbai-facing-flood-again/

K.Sakthipriya
Krishi Jagran 

English Summary: Rain Alert for 4 Districts! Continuous Rainfall For Next 24 hours in Tamil Nadu: Heavy wind Fisher mans were warned for next 2 days
Published on: 06 September 2019, 11:26 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now