மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 30 May, 2021 7:23 PM IST
Credit : Dinamalar

கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் சேதமடைந்த வீடுகளுக்கு மழை நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் (CM Stalin) அறிவித்துள்ளார். சோகத்தில் ஆழ்த்தியுள்ள குமரி மக்களுக்கு, முதல்வரின் அறிவிப்பு சற்று ஆறுதலை அளித்துள்ளது.

வெள்ளப்பெருக்கு

வங்கக்கடலில் உருவான, யாஸ் புயலின் (Yaas cyclone) தாக்கம், தமிழகத்தின் கன்னியாகுமரி வரையில் இருந்தது. கன்னியாகுமரியில் புயல், கனமழையால் பல இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. புத்தேரி, கோட்டார், வடசேரி உள்ளிட்ட பல இடங்களில் வீடுகள் சில இடிந்தன. தாழ்வான பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. கருங்கல் அருகே ரீத்தாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரியகுளம், காக்கைகுளம், தாமரைகுளம் என மூன்று குளங்கள் நிரம்பி வழிந்து, 150க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் (Flood) சூழ்ந்துள்ளது.

நிவாரணம்:

இதன்படி, மழையால் முழுமையாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு தலா ரூ.5 ஆயிரமும். பகுதியாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு ரூ.4,100 நிவாரணமாக (Relief Fund) வழங்கப்படும்.

மேலும் இடுபொருள் நிவாரணமாக, மானாவரி, நீர்பாசன வசதி பெற்ற பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பல்லாண்டு கால பயிர்களுக்கு நிவாரணமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்றும், இடுபொருள் நிவாரணமாக ரூ.20 ஆயிரமும், மானாவாரி பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க

சூறாவளி காற்று வீசியதால் 250 ஏக்கர் முந்திரி மரங்கள் வேரோடு சாய்ந்தன! இழப்பீடு வேண்டி விவசாயிகள் கோரிக்கை

பொள்ளாச்சியில் விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ 9¼ கோடி ஒதுக்கீடு

English Summary: Rain-damaged houses in Kanyakumari cost Rs. 5,000 relief! Chief Announcement!
Published on: 30 May 2021, 07:23 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now