News

Friday, 16 April 2021 02:12 PM , by: KJ Staff

Credit : Samayam Tamil

கோடை வெயில் சுட்டெரித்த நிலையில், தற்போது தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவது மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக அடுத்த இரண்டு தினங்களுக்கு ஏப்ரல் 16, 17 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai Meteorological Center) தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 17 முதல் 19 வரை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னை வானிலை:

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை (Minimum temperature) 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையளவு:

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கோவில்பட்டி (தூத்துக்குடி) 9, மஞ்சளாறு (தஞ்சாவூர்), நத்தம் (திண்டுக்கல்) தலா 7, மதுரை விமான நிலையம் 6, சாத்தூர் (விருதுநகர்), காரியாபட்டி (விருதுநகர்), திருமங்கலம் (மதுரை), பெருந்துறை (ஈரோடு) தலா 5 , எட்டயபுரம் (தூத்துக்குடி), பெரம்பலூர், விருதுநகர் தலா 4, மருங்காபுரி (திருச்சிராப்பள்ளி), மானாமதுரை (சிவகங்கை), பெரியாறு (தேனி), பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி) தலா 3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை!

ஏப்ரல் 16 ஆம் தேதி இன்று தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று, மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் (Fisherman) இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தபடுகிறார்கள்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

தமிழகத்தில் தொடங்கியது கொரோனா தடுப்பூசி திருவிழா

நள்ளிரவில் வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதை அறிய புதிய யுக்தி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)