மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 22 June, 2019 10:53 AM IST

இன்னும் 2 நாட்களில் சென்னை மற்றும்  புதுவையில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடும் வெப்ப நிலை மாறி தற்போது மிதமான சூழ்நிலை நிலவுகிறது.

தென்மேற்குப் பருவ மழையானது கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் பெய்து வந்தது. வட தமிழகம் அனல் காற்றால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி  வந்தது. தற்போது அந்நிலை மாறி நேற்று  தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. 

வளிமண்டலதில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்னும் இரு தினங்களில் தமிழகம் மற்றும் புதுவையின் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.தமிழகம் மற்றும் புதுவையில் நிலவி வந்த கடும்  வெப்பம் முடிவுக்கு வரும். வெப்பநிலையானது 41 டிகிரிலிருந்து  38 டிகிரியாகக் குறைந்துள்ளது.

ஆறு மாதங்களுக்கு பிறகு மழை பெய்வதால் இம்மழையானது மேலும் 4 முதல் 5 நாட்களுக்கு பெய்ய வாய்ப்புள்ளது. நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த இம்மழை போதுமானதாக இருக்காது. எனினும் அதற்கான ஆயுதத்தை செய்து வைத்தால் எதிர் வரும் வட கிழக்கு பருவ மழையில் நிலத்தடி நீர் மட்டத்தை கணிசமாக உயர்த்தலாம் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து.

Anitha Jegadeesan

Krishi Jagran

English Summary: Rain will continue Next Two Days: Chennai And Pondycherry Temperatures Gradually Reduce
Published on: 22 June 2019, 10:53 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now