மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 22 August, 2019 11:38 AM IST

வங்கக் கடலில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை, திருநாவலூர், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு பெய்த மழையால் கடைகளில் மழை நீர் புகுந்தது. சிவகங்ககை மாவட்டம் மானாமதுரை, திருபுவனம், காரைக்குடி, தேவகோட்டை ஆகிய இடங்களில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, ஆவுடையார் கோவில், மஞ்சக்கொடி உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழை கொட்டித் தீர்த்தது.

கும்பகோணம் சுற்றுவட்டார ஊர்களான நாச்சியார் கோவில், திருனாகேஸ்வரம், பட்டீஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் திடீரென பலத்த மழை பெய்தது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார், குத்தாலம், வைத்தீஸ்வரன், செம்பனார் கோவில், மணல்மேடு உள்ளிட்ட இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுற்று வட்டாரங்களில் மிதான மழை பெய்தது. சேலம் மாவட்டம்  ஆலம்பாடி, மேட்டுப்பட்டி  உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும் 10 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.     

நேற்றைய நிலவரம் படி சேலம் மாவட்டம் அரியலூர், மேட்டூர், கடலூர் மாவட்டம் தொழுதூர் ஆகிய இடங்களில் தலா 7 செ. மீ மழையும், விருதுநகர் மாவட்டம் கோவிலங்குளம், விருதுநகர், நாமாக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆகிய இடங்களில் தலா  6 செ. மீ மழையும்,  சிவகங்கை மாவட்டம்  திருபுவனம், மதுரை மாவட்டம் சோழவந்தான், அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம், நீலகிரி மாவட்டம் தேவாலா ஆகிய இடங்களில் தலா  5 செ. மீ மழையும் பதிவாகியுள்ளது. 

https://tamil.krishijagran.com/news/latest-weather-report-latest-weather-report-chennai-meteorological-department-forecast-rain-for-the-next-two-days/

K.Sakthipriya
krishi Jagran

English Summary: Rainfall expected in 10 districts of Tamil Nadu: continuous rains public and farmers were happy
Published on: 22 August 2019, 11:38 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now