நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 September, 2022 3:18 PM IST
Rajpath with new dimensions, now Kartavya path! PM Modi

விஜய் சௌக் மற்றும் இந்தியா கேட்டை இணைக்கும் சாலை புதன் கிழமை சரித்திரம் இடம்பெற்றது. சுமார் 3.20 கிமீ நீளமுள்ள ராஜ்பாத் எனும் ராஜ பாதை இனி புதிய தோற்றம் மற்றும் பெயருடன் கர்தவ்ய பாத் அதாவது கடமை பாதை என்று அழைக்கப்படும். இதை பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு திறந்து வைத்தார்.

அதன் புதிய வடிவத்தில், சுமார் 15.5 கிமீ நடைபாதை, கர்தவ்ய பாதையைச் சுற்றி சிவப்பு கிரானைட்டால் ஆனது. அதன் அருகே சுமார் 19 ஏக்கரில் குளம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மீது 16 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. உணவுக் கடையுடன் இருபுறமும் இருக்கை வசதியும் உள்ளது. முழுப் பகுதியும் 3.90 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவு பசுமையாக காட்சியளிக்கிறது. சுவாரஸ்யமான, நடைபாதைகள் மற்றும் சிறந்த வாகன நிறுத்துமிடங்களின் வளர்ச்சியுடன், பாதசாரிகளுக்காக புதிய பாதாளச் சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்தி சாயும் போது அதன் பார்வை மாறுபடும். இருள் சூழும்போது, அதன் அதிநவீன விளக்குகள், அதன் அனுபவமே வித்தியாசமாக அமையும். வெள்ளிக்கிழமை முதல் இந்தப் பகுதி சாமானியர்களுக்கும் பொதுவானதாக இருக்கும்.

நேதாஜியின் சிலையின் முக்கிய அம்சங்கள்:

பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா கேட்டில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 28 அடி உயர சிலையையும் திறந்து வைக்கிறார். கிரானைட் கல்லில் செதுக்கப்பட்ட இந்த சிலையின் எடை 65 மெட்ரிக் டன் ஆகும். ஜனவரி 23 பராக்ரம் திவாஸ் அன்று நேதாஜியின் ஹாலோகிராம் சிலை காணப்பட்ட அதே இடத்தில் நிறுவப்பட்டுள்ளது.

ராஜ்பாத்-இன் வரலாறு மற்றும் இன்றைய நிலை

சுதந்திரத்திற்கு முன், ராஜ்பாதை கிங்ஸ் வே அதாவது அரசர் வழி என்றும் ஜன்பத்-ஐ குயின்ஸ் வே அதாவது ராணியாரின் வழி என்றும் அழைக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு, பெயர் ஜன்பத் என்று மாற்றப்பட்டது. அதேசமயம் கிங்ஸ் வே ராஜபாத் என்று அழைக்கப்பட்டது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தற்போது அதன் பெயர் கர்தவ்ய பாதை அதாவது கடமை பாதை என மாற்றப்பட்டுள்ளது. ராஜ்பாத், ஆளப்படுபவர்களை ஆளும் மன்னனின் கருத்தை பிரதிபலிக்கிறது என்று மத்திய அரசு நம்புகிறது. அதேசமயம் ஜனநாயக இந்தியாவில் மக்கள்தான் உயர்ந்தவர்கள். எனவே, இந்த பெயர் மாற்றம் வெகுஜன ஆதிக்கத்திற்கும் அதன் அதிகாரத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டு.

19 ஏக்கர் பரப்பளவில் உள்ள குளம் பகுதி சீரமைக்கப்பட்டுள்ளது. இதில் நடந்துசெல்வோர்களுக்காக 16 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. கிருஷி பவன் மற்றும் வணிக கட்டிடம் அருகே படகு சவாரியும் செய்யலாம்.

- இங்கு வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டுள்ளது. இதில் 1,125 வாகனங்கள் செல்ல முடியும் என்பது குறிப்பிடதக்கது. இது தவிர, இந்தியா கேட் அருகேவும் பார்க்கிங் இடம் உள்ளது, அங்கு 35 பேருந்துகள் நிறுத்தலாம்.
-74 வரலாற்று சிறப்புமிக்க மின்கம்பங்கள் மற்றும் சங்கிலி இணைப்புகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், 900க்கும் மேற்பட்ட புதிய மின்கம்பங்களும் நிறுவப்பட்டுள்ளன.

சென்ட்ரல் விஸ்டா அவென்யூ 3.90 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. மக்கள் நடந்து செல்ல 15.5 கி.மீ., நீளத்துக்கு பாதை தயார் செய்யப்பட்டுள்ளது. இது சிவப்பு கிரானைட்டால் மூடப்பட்டிருக்கும். அப்பகுதி முழுவதும் சிசிடிவி கண்காணிப்பில் உள்ளது. அதே நேரத்தில், 80 பாதுகாப்புப் பணியாளர்கள் எல்லா நேரங்களிலும் நிறுத்தப்படுவார்கள்.

மேலும் படிக்க:

சென்னையில் அரசு சார்பாக மக்கள் குறைதீர் முகாம்!

Hotel Management: தாட்கோ மூலம் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு! விவரம் உள்ளே

English Summary: Rajpath with new dimensions, now Kartavya path!
Published on: 08 September 2022, 02:16 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now