சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 12 May, 2022 6:01 PM IST
Tomato virus
Tomato virus

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் பரவி வரும் புதிய காய்ச்சலுக்கு 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தக்காளி காய்ச்சல் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் பாதிப்பு கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஆரியங்காவு, அஞ்சல், நெடுவத்தூர் ஆகிய பகுதிகளில் அதிகமாக உள்ளது.

இதுவரை 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இக்காய்ச்சல் தமிழகத்திற்குள் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு, கேரள எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைப் பரிசோதிக்க பிரத்யேக மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் குழந்தைகளைப் பரிசோதிப்பதற்காக அங்கன்வாடிகளில் சிறப்புப் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு, 24 பேர் பேர் கொண்ட குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த தக்காளிக் காய்ச்சல் வைரஸ் காய்ச்சலா அல்லது சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சலுக்குப் பிந்தைய காய்ச்சலா என்பது உறுதியாகத் தெரியவில்லை. தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு உடலில் சிவப்புக் கொப்புளங்கள் தோன்றுவதால் இது தக்காளி காய்ச்சல் என அழைக்கப்படுகிறது.

தக்காளிக் காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு தீவிர காய்ச்சல், உடலில் தடிப்புகள், தோல் எரிச்சல், கை மற்றும் கால்களின் தோல் நிற மாற்றம், கொப்புளங்கள், வாந்தி, வயிற்றுப்போக்கு, சளி, இருமல், தும்மல், சோர்வு மற்றும் உடல் வலி போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன. குழந்தைகளுக்கு இதில் எந்த அறிகுறிகள் தோன்றினாலும் உடனடியாக மருத்துவவரை அணுக வேண்டுமென சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க

தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க, பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

English Summary: Rapidly spreading tomato fever, affecting 80 children
Published on: 12 May 2022, 06:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now