நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 May, 2022 6:01 PM IST
Tomato virus

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் பரவி வரும் புதிய காய்ச்சலுக்கு 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தக்காளி காய்ச்சல் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் பாதிப்பு கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஆரியங்காவு, அஞ்சல், நெடுவத்தூர் ஆகிய பகுதிகளில் அதிகமாக உள்ளது.

இதுவரை 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இக்காய்ச்சல் தமிழகத்திற்குள் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு, கேரள எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைப் பரிசோதிக்க பிரத்யேக மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் குழந்தைகளைப் பரிசோதிப்பதற்காக அங்கன்வாடிகளில் சிறப்புப் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு, 24 பேர் பேர் கொண்ட குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த தக்காளிக் காய்ச்சல் வைரஸ் காய்ச்சலா அல்லது சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சலுக்குப் பிந்தைய காய்ச்சலா என்பது உறுதியாகத் தெரியவில்லை. தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு உடலில் சிவப்புக் கொப்புளங்கள் தோன்றுவதால் இது தக்காளி காய்ச்சல் என அழைக்கப்படுகிறது.

தக்காளிக் காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு தீவிர காய்ச்சல், உடலில் தடிப்புகள், தோல் எரிச்சல், கை மற்றும் கால்களின் தோல் நிற மாற்றம், கொப்புளங்கள், வாந்தி, வயிற்றுப்போக்கு, சளி, இருமல், தும்மல், சோர்வு மற்றும் உடல் வலி போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன. குழந்தைகளுக்கு இதில் எந்த அறிகுறிகள் தோன்றினாலும் உடனடியாக மருத்துவவரை அணுக வேண்டுமென சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க

தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க, பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

English Summary: Rapidly spreading tomato fever, affecting 80 children
Published on: 12 May 2022, 06:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now