News

Monday, 01 July 2019 01:53 PM

கடந்த மாதம் கோடை வெயிலின் அதிகரிப்பினாலும், மழை இன்மை காரணத்தினாலும் வரத்து குறைவால் கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் அளவு குறைந்திருந்த நிலையில், விலைகள் உயர்த்தப்பட்டு விற்கப்பட்டன.

தற்போது காய்கறிகளின் விற்பனையில் தக்காளியின் விலை மட்டும் குறைந்து கிலோ ரூ 35 ஆக விற்கப்படுகிறது. கிருஷ்ணகிரி, ஆந்திரா, கர்நாடக, ஓசூர் ஆகிய எல்லையோரப் பகுதிகளில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு தக்காளி அதிகளவில் வருகின்றன, இதனால் சந்தையில் தாக்காளியின் விற்பனை அதிகரித்துள்ளது.  

மேலும் மற்ற காய்கறிகளான பீன்ஸ் ரூ 60, அவரைக்காய் ரூ 50, வெங்காயம் ரூ 22, சாம்பார் வெங்காயம் ரூ 60, பச்சை மிளகாய் ரூ 45, வெண்டைக்காய், புடலங்காய் தலா ரூ 35, முட்டைகோஸ் ரூ 16, கத்திரிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி தலா ரூ 25, கேரட் ரூ 45, பாகற்காய் ரூ 40, உருளைக்கிழங்கு ரூ 16, பீட்ரூட் ரூ 35, என அதிகரித்தும், அதே விலையிலும் விற்கப்பட்டு வருகின்றது.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)