News

Wednesday, 30 March 2022 07:06 AM , by: R. Balakrishnan

Ration at Home

பஞ்சாபில் வீட்டுக்கே வந்து ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும், என, முதல்வர் பகவந்த் மான் அறிவித்து உள்ளார். பஞ்சாபில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி அபார வெற்றி பெற்று, பகவந்த் மான் முதல்வராக பொறுப்பேற்றார். இந்நிலையில், மாநிலத்தில் ரேஷன் பொருட்களை வீடுகளில் நேரடியாக வழங்கும் திட்டம் துவங்கப்படும் என, அவர் அறிவித்துள்ளார்.

வீட்டுக்கே ரேஷன் (Ration at Home)

பஞ்சாப் முதல்வர் மேலும் கூறியதாவது: மாநிலத்தில், வீட்டிற்கே வந்து ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் விரைவில் துவங்கப்பட உள்ளது. இனி, ஏழைகள் வேலைகளை விட்டு ரேஷன் கடைகளில் வரிசையில் காத்திருக்க வேண்டாம்.

பொதுமக்களை 'மொபைல் போனில்' தொடர்பு கொண்டு, அவர்கள் இருக்கும் நேரத்தில் ரேஷன் பொருட்கள் கொண்டு வந்து சேர்க்கப்படும். ரேஷன் கடைகளுக்கு மிக அருகில் வசிப்போர், கடைகளுக்கு சென்று பொருட்களைப் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

திட்டம் குறித்து ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ''பஞ்சாபில் வீடு தோறும் ரேஷன் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இதன்பின், அனைத்து மாநிலங்களிலும் இதே நடைமுறையை பின்பற்ற வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுப்பர், என்றார்.

மேலும் படிக்க

பாரத் பந்த்: பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க மத்திய அரசு அறிவுரை!

தேசிய பென்சன் திட்டம்: புதிய மாற்றங்கள் ஏற்படுத்த பரிந்துரை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)