News

Sunday, 05 June 2022 07:17 PM , by: T. Vigneshwaran

Ration card

ரேஷன் கார்டு விதிகளில் மாற்றம் செய்ய, உணவு மற்றும் பொது வினியோகத் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகம் உட்பட, நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலம், பொது மக்களுக்கு குறைந்த விலையில், அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏழை எளிய மக்கள் ரேஷனில் பயனடைந்து வரும் நிலையில், வசதி படைத்தவர்கள் மற்றும் தகுதியற்ற ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், முறைகேடாக, பொருட்களை பெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், ரேஷன் கார்டு விதிகளில் மாற்றம் செய்ய, உணவு மற்றும் பொது வினியோகத் துறை முடிவு செய்துள்ளது. இதன்படி, ரேஷன் கடைகளில் தகுதி உடைய அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் அளவு மாறக் கூடும் எனத் தெரிகிறது. இதற்காக, புதிய அளவு பட்டியல் கிட்டத்தட்ட தயாராக விட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, மாநில அரசுகளுடன், மத்திய உணவு மற்றும் பொது வினியோகத் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

நாட்டில் போலியான முறையில் ரேஷனைப் பயன்படுத்திக் கொள்ளும் பலர் உள்ளனர். உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் தகவலின்படி, தற்போது நாடு முழுவதும் 80 கோடி மக்கள் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை (NFSA) பயன்படுத்தி வருகின்றனர். அவர்களில் பொருளாதார ரீதியாக வசதி படைத்தவர்கள் பலர் உள்ளனர். இதனால் தான் தற்போது அரசு ரேஷன் கார்டு விதிகளை மாற்றப் போவதாகக் கூறப்படுகிறது. மாநில அரசுகள் அளித்துள்ள பரிந்துரைகளை மனதில் கொண்டு, புதிய தரநிலைகள் தயாரிக்கப்பட்டு, விரைவில் இறுதி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.

நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில், 'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம்' செயல்படுத்தப்பட்டு உள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வரும் கோடிக் கணக்கான பயனாளிகள் அதாவது 86 சதவீத மக்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தகுதியற்ற மற்றும் போலியான ரேஷன் கார்டுகளை ரத்து செய்யவும் அதிகாரிகள் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க

ஆடு மேய்க்கச் சென்ற 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)