சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 11 August, 2022 1:36 PM IST
தேசியக் கொடி வாங்கினால் தான் ரேஷன் பொருள்
தேசியக் கொடி வாங்கினால் தான் ரேஷன் பொருள்

நாட்டின் 75வது சுதந்திர தினம் வரும் 15- ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக விடுதலை தின அமுதப்பெருவிழா என்ற தலைப்பில், நாடு முழுவதும் மத்திய அரசு கொண்டாட்ட ஏற்பாடுகளை செய்து வருகிறது. வீடுகள் தோறும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இதற்காக பாஜக ஆளும் மாநிலங்களில் அரசு சார்பில் லட்சக்கணக்கான கொடிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் ஹரியானா மாநிலத்தில் தேசியக் கொடி வாங்கினால் மட்டுமே, ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று நிர்பந்திப்பதாக புகார் எழுந்துள்ளது. கர்னல் மாவட்டத்தின் ஹெம்தா கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில், 20 ரூபாய்க்கு தேசியக் கொடி வாங்கினால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அப்பகுதி மக்கள் கூறிய வீடியோ ஒன்றை பாஜக எம்.பி.வருண் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

ஏழைகளின் உணவைப் பறித்துத்தான் தேசியக் கொடிகளை விற்பனை செய்யவேண்டுமா எனவும் வருண் காந்தி காட்டமாக கேள்வி எழுப்பினார். அதனைதொடர்ந்து இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. பின்னர், தேசியக் கொடியை வாங்க மக்களை கட்டாயப்படுத்தியதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அக்கடையின் ரேஷன் விநியோக உரிமத்தை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய ரேஷன் பொருட்கள் விநியோகஸ்தர், அரசு உத்தரவின்படியே தாங்கள் தேசியக் கொடியை விற்பனையை செய்ததாக கூறினார். ஆனால் இதனை மறுத்துள்ள ஹரியானா அரசு, மக்கள் விருப்பப்பட்டால் தான் தேசியக் கொடியை விற்பனை செய்யவேண்டும் என்று விளக்கமளித்துள்ளது.

மேலும் படிக்க:

திருமணம் ஆனவர்கள் ரூ.72,000 பென்சன் பெற முடியும், எப்படி தெரியுமா?

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை

English Summary: Ration means only if you buy the national flag
Published on: 11 August 2022, 01:36 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now