மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 April, 2022 4:08 PM IST
Reserve Bank of India Change in Banking Hours.....

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களுக்கு வங்கி தொடர்பான பணிகளை முடிக்க 1 மணிநேரம் கூடுதலாக கிடைக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இன்று (ஏப்ரல் 18, 2022) வெளியிட்ட அறிக்கையின்படி, வங்கி அதன் காலவரிசையை மாற்றி அமைத்துள்ளது.

தொடர்ந்து 4 நாட்கள் வங்கி மூடப்பட்டதைத் தொடர்ந்து, ஏப்ரல் 18, 2022 முதல் வங்கிகள் திறக்கும் நேரத்தை ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது. அதன்படி, திங்கள்கிழமை காலை 9 மணி முதல் வங்கிகள் திறந்திருக்கும்.

ரிசர்வ் வங்கி புதிய முறையை அமல்படுத்தியது:

இதற்கிடையில் வங்கிகள் மூடப்படும்  நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி, இந்த ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை சந்தைகளின் வர்த்தக நேரம் காலை 9:00 மணி முதல் மாலை 3:30 மணி வரை இருக்கும்.

இந்திய ரிசர்வ் வங்கி COVID-19-ன் கட்டுப்பாடு நீக்கத்திற்குப் பிறகு இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளது.

சந்தைகளில் வர்த்தக நேரமும் மாறியது:

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில், மாற்றத்தின் போது அந்நியச் செலாவணி சந்தை மற்றும் அரசுப் பத்திரங்களில் பரிவர்த்தனை செய்யலாம் என்று தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 18, 2022 முதல், ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறைச் சந்தைகளான அந்நியச் செலாவணி இந்திய ரூபாய் வர்த்தகம், ஃபாரெக்ஸ் டெரிவேடிவ்கள், ரூபாய் வட்டி விகித டெரிவேடிவ்கள், கார்ப்பரேட் பத்திரங்களில் ரெப்போ போன்றவற்றின் வர்த்தகங்களை, கோவிட் தொற்று நோய்க்கு பின், முந்தைய நேரங்களிலேயே அதாவது காலையில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய நிலைக்குத் திரும்பியது:

முன்னதாக, 2020 ஆம் ஆண்டில் கொரோனா விரிவாக்கத்தைக் கருத்தில் கொண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி சந்தையின் வர்த்தக நேரத்தை இந்திய ரிசர்வ் வங்கி மாற்றியது. சந்தை நேரம் காலை 10 மணி முதல் மாலை 3.30 மணி வரை மாற்றப்பட்டது, வர்த்தக நேரம் அரை மணி நேரமாகக் குறைக்கப்பட்டது.

அதன்பிறகு, செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டு, நவம்பர் 9, 2020 முதல் வர்த்தக நேரம் ஓரளவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், நீண்ட மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பழைய நேரம் மாறிவிட்டது.

மேலும் படிக்க:

ATM Card இல்லாமல் UPI மூலம் ATM-ல் பணம் எடுக்கலாம்? விவரம் உள்ளே!!

மார்ச் 27 முதல் ஏப்ரல் 3 வரை வங்கிகள் தொடர் விடுமுறை : 2 நாட்கள் மட்டுமே செயல்படும்!

English Summary: RBI: Change in bank working hours!
Published on: 18 April 2022, 04:08 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now