மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 August, 2019 1:10 PM IST

மோட்டார் வாகன சட்ட பிரிவின் கீழ் போக்கு வரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு புதிய அபராதம் விரைவில் அமுல் படுத்த உள்ளதாக சென்னை பெரு நகர போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.   

தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமீறல் அதிக அளவில் நடக்கிறது. இதனால் உயிரிழப்பும், விபத்துகளும் ஏற்படுகின்றன. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, தலை கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது, அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, உரிமம் இல்லாமல், உரிமம் புதிப்பிக்காமல் வாகனம் ஓட்டுவது என அனைத்தும் போக்குவரத்து விதிமீறல் கீழ் வரும் குற்றங்கள் ஆகும்.

சென்னை போன்ற பெரு நகரங்களில் போக்குவரத்து விதிமீறல், விபத்துகள் பெருமளவில் நடைபெறுவதாக போக்குவரத்து காவல்துறையினர் கூறுகின்றனர். விதிமீறலில் ஈடுபடுபவர்களிடம் வசூலிக்கப்பட்டும் அபராதத் தொகையை குறைவாக இருப்பதால், விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்கின்றனர் போக்குவரத்து காவல் துறையினர். இதன் காரணமாக தமிழக போக்குவரத்து காவல்துறை அபராதத் தொகையை உயர்த்தி செய்தி வெளியிட்டுள்ளது.

சாலை விபத்துகளையும், உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் புதிய வாகன சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் படி புதிய அபராதம் வசூலிக்கப்பட்ட உள்ளது.  சென்னை போன்ற பெரு நகரங்களில் போக்குவரத்து ஒரு நாளைக்கு 20,000 அதிகமான போக்குவரத்துக்கு அத்துமீறல் வழக்குகள் பதியப்படுகிறது எனவும், 100 அதிகமான போக்குவரத்து காவல் துறையினர் பணிகளில் ஈடுபடுகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் புத்தாண்டு  போன்ற சிறப்பு நாட்களில் காவல் துறையினரின் பணி இரு மடங்காக உயருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


போக்குவரத்து விதிமீறல்

தற்போதைய அபராதம்

புதிய அபராதம்

போக்குவரத்து பொது விதிமீறல் அபராதம்

ரூ 100

ரூ 500

சாலை ஒழுங்குமுறை விதிமீறல்

ரூ 100

ரூ 500

பயணச் சிட்டு இல்லமால் பயணிப்பது

ரூ 200

ரூ 500

போக்குவரத்து அதிகாரிகளின் உத்தரவை மீறுதல்

ரூ 500

ரூ 2000

அங்கீகாரமின்றி உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்

ரூ 1000

ரூ 5000

உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்

ரூ 500

ரூ 5000

தகுதியிழப்பு செய்த பின்னர் வாகனம் ஓட்டுதல்

ரூ 500

ரூ 10,000

நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட பெரிய வாகனம்

-           

ரூ 5000

அதிவேகமாக வாகனம் ஓட்டுதல்

ரூ 400

ரூ 1000 -2000

ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டுதல்

ரூ 1000

ரூ 5000

மது அருந்தி விட்டு  வாகனம் ஓட்டுதல்

ரூ 2000

ரூ 10000

சாலைகளில் வேகமாக/ பந்தயங்களில் ஈடுபடுவது

ரூ 500

ரூ 5000

அனுமதியின்றி வாகனம்  ஓட்டுதல்

ரூ 5000

ரூ 10000

உரிமம் தொடர்பான அதிமிறல்

 -

ரூ 25,000 –

 100000

சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுவது

ரூ 100

ரூ 1000

இரண்டிற்கு மேற்பட்டோர் இரு சக்கர வாகனத்தில் பயணிப்பது

ரூ 100

ரூ 2000*

தலை கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுவது

ரூ 100

ரூ 1000*

ஆம்புலன்ஸ் மற்றும் அவசர தேவைக்கு வழிவிடாமல் வாகனம் ஓட்டுவது

-

ரூ 10000

காப்பீடு இல்லமல் வாகனம் ஓட்டுவது

ரூ 1000

ரூ 2000

சிறார்கள் வாகனம் ஓட்டுவது

 -

**

* ஓட்டுநர் உரிமம் 3 மாதங்கள் தகுதி இழப்பு
**காப்பாளர்/வாகன உரிமையாளர் குற்றவாளி, ரூ 25,000 அபராதம் மற்றும் 3   ஆண்டுகள் சிறை. வாகனத்தின் பதிவு ரத்து.

Anitha Jegadeesan 
krishi Jagran  

English Summary: Read the Revised list of Penalties for Traffic Violation
Published on: 16 August 2019, 01:10 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now