மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 November, 2020 6:30 PM IST
Credit : New Indian Express

நிவர் புயல் (Nivar Cyclone) குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, காவல்துறை உள்ளிட்ட மீட்புப் படைகளை தொடர்பு கொண்டு உரிய முன்னெச்சரிக்கை (Precaution) நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் நிவர் புயலால் தமிழகத்திற்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை. மாவட்ட ஆட்சியர்களுக்கும் முழுமையான அறிவுரை வழங்கப்பட்டது. நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் 2,999 முகாம்களில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். கடலூரில் மட்டும் 441 முகாம்கள் அமைக்கப்பட்டு, தாழ்வான பகுகிதளில் வசிக்கும் மக்கள் அந்த முகாமில் தங்க வைத்துள்ளோம்.

நெற்பயிர்கள் சேதம்:

புயல் காற்றினால் கடலூரில் 321 மரங்கள் சாய்ந்தன. அனைத்து மரங்களும் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. மின்சாரம் நிறுத்தப்படாவிட்டால் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். அரசு அறிவிப்புகளை (Government notices) மக்கள் சரியாக பின்பற்றியதால் பெரும் பாதிப்பு தவிர்க்க பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 1,611 ஹெக்டர் நெற்பயிர்கள் (Paddy crops) வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது.

விவசாயிகளுக்கு நிவாரணம்:

முழுமையாக கணக்கெடுத்த பின்னர் சரியான புள்ளிவிவரங்கள் (Statistics) கிடைத்த பிறகு விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கப்படும். காப்பீடு (Insurance) செய்யாத விவசாயிகளுக்கு பேரிடர் நிதியில் (Disaster Fund) இருந்து நிவாரணம் வழங்கப்படும். இரவு பகல் பாராமல் பணியாற்றிய அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையினருக்கு பாராட்டுகள். அனைவரும் ஒருங்கிணைந்து எடுத்த நடவடிக்கையின் காரணமாகவே இன்று பெருமளவு உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது என முதல்வர் தெரிவித்தார்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

கூட்டுறவு வங்கிகளைப் போல் இனி மாநில வேளாண் வங்கியிலும் விவசாயக் கடன்!

கஜா புயலின் 2-ம் ஆண்டு! 1000 பனை விதைகளை விதைப்பு!

English Summary: Relief for farmers who do not have crop insurance! Chief Announcement!
Published on: 27 November 2020, 06:30 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now