மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 7 November, 2021 9:30 AM IST
New type of corona spreading

தடுப்பூசி போட்டுக் கொள்ள தயங்குபவர்களால் புதிய வகை கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் இதுவரை 100 கோடி டோஸுக்கு மேல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எனினும், பலர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் முதல் டோஸ் செலுத்திக்கொண்ட பலர் 2-வது டோஸ் செலுத்திக் கொள்வதை தவிர்த்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், தடுப்பூசி போட்டுக் கொள்ள தயங்குபவர்களால் புதிய வகை கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்போலோ டெலிஹெல்த் மூத்த மருத்துவர் முபாஷீர் அலி கூறும்போது, “பொதுமக்கள் சந்தேகம், தயக்கம் காரணமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயங்கினாலோ, தாமதப்படுத்தினாலோ புதிய வகை கரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. புதிய வகை வைரஸ் வேகமாக பரவும் திறன் கொண்டிருப்பதுடன் தடுப்பூசியை எதிர்க்கும் ஆற்றல் பெற்றிருக்கிறது.

விழிப்புணர்வு அவசியம்

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை அரசு விரைவுபடுத்த வேண்டும். கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக தடுப்பூசி தொடர்பாக பொதுமக்களிடம் உள்ள அச்சத்தைப் போக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

தொற்று பரவ வாய்ப்பு

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை தவிர்ப்பவர்களால் அவர்களது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கும் தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் கொரோனா பரவலைத் தடுக்க முடியும். அப்படியே பரவினாலும் பாதிப்பு குறைவாக இருக்கும். உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும். சமுதாயத்தில் பிறருக்கு பரவுவதும் தடுக்கப்படும்.

இது மட்டுமல்லாமல், சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல்உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்றார்.

மேலும் படிக்க

கொரோனாவைக் குணப்படுத்த வந்தாச்சு மாத்திரை: பிரிட்டனில் அனுமதி!

உலகிலேயே முதல்முறையாக கழுதைப்புலிக்கும் கரோனா தொற்று!

English Summary: Reluctance to get vaccinated: Risk of spreading new type of corona virus!
Published on: 07 November 2021, 09:30 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now