News

Wednesday, 26 January 2022 10:47 AM , by: R. Balakrishnan

Republic day celebration

நாட்டின் 73வது குடியரசு தின விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை மெரினாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை (National Flag) ஏற்றினார். அதே போல, பிற மாநிலங்களில் அந்தந்த மாநில ஆளுநர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்தனர். இந்த நிலையில், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையினர் கடும் குளிரிலும் தேசியக்கொடியை ஏற்றி குடியரசு தினத்தை சிறப்பாக கொண்டாடினர்.

கடுங்குளிரிலும் கொண்டாட்டம்! (Celebration in bitter cold)

அவர்கள் லடாக் எல்லையில் 15 ஆயிரம் அடி உயரத்தில், மைனஸ் 35 டிகிரி செல்சியஸ் குளிரில் தேசியக்கொடியை ஏந்தி கொண்டாடினர். அதேபோல, உத்தரகாண்ட் மாநில குமாண் பகுதியில் கடும் குளிரில் சுமார் 12 ஆயிரம் அடி உயரத்தில் தேசியக்கொடியுடன் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும், அம்மாநிலத்தில் 11 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள ஆலி பகுதியில் மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் குளிரில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

இமாசலபிரதேசத்தில் 16 ஆயிரம் அடி உயரத்தில் தேசியக்கொடியுடன் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பிரமர் வாழ்த்து (Prime minister wishes)

இந்தியா தனது 73-வது குடியரசு தினத்தை கொண்டாடி வருகிறது. அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாளை குடியரசு தின விழாவாக கொண்டாடி வருகிறோம். இந்த இனிய நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கு எனது வாழ்த்துகள் ஜெய் ஹிந்த் என் பிரதமர் மோடி வாழ்த்துகளை பரிமாறினார்.

மேலும் படிக்க

இந்திய குடியரசு தினம்: சென்னையில் தேசிய கொடி ஏற்றினார் கவர்னர்!

தேசிய பெண் குழந்தைகள் தினம்: பெண் குழந்தைகளை பாதுகாப்போம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)