News

Wednesday, 15 September 2021 11:24 AM , by: R. Balakrishnan

Restrictions in Chennai again

சென்னையில், ஏற்ற, இறக்கத்துடன், கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதால், ஞாயிற்றுக்கிழமைகளில், மீண்டும் கட்டுப்பாடுகளை கொண்டு வர, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில், தினசரி கொரோனா பாதிப்பு, 170 முதல் 200 வரை என, ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகிறது. நேற்று, 185 பேர் பாதிக்கப்பட்டு, ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, 1,752 பேர் சிகிச்சைபெறுகின்றனர். தினசரி தொற்று, ஏற்ற, இறக்கத்துடன் இருப்பதை தொடர்ந்து, கொரோனா தடுப்பு பணிகளில் மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமைகளில், காசிமேடு மீன் மார்க்கெட், தி.நகர் பகுதிகளில், சமூக இடைவெளியின்றி மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இவை, மூன்றாம் அலை தொற்றுக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது.

மீண்டும் கட்டுப்பாடுகள்

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில், காசிமேடு மீன் மார்க்கெட் பகுதிகளில், சில்லரை வியாபாரத்துக்கு தடை விதிப்பது குறித்து, மாநகராட்சி ஆலோசித்து வருகிறது. அதேபோல், தி.நகர் பகுதிகளில், அதிகளவில் மக்கள் கூடுவதால், தடுப்பு வேலிகளை அமைத்து, கட்டுப்பாடுகளை விதிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை மாநகர நல அலுவலர் ஜெகதீசன் கூறியதாவது: சென்னையில் தினசரி, 22 ஆயிரம் முதல், 25 ஆயிரம் பேருக்கு, ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை செய்யப்படுகிறது. அதில், ஏற்ற, இறக்கத்துடன் தான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. குறிப்பாக, குடும்ப தொற்று அதிகளவில் கண்டறியப்பட்டு வருகிறது.

ஒரு குடும்பத்தில், ஒருவர் பாதிக்கப்பட்டால், அக்குடும்பத்தில் மூன்று பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். எனவே, வெளியே செல்லும் போது, தங்கள் பாதுகாப்பை அனைவரும் உறுதி செய்து கொள்ள வேண்டும். சென்னையில், ஒரு தெருவில், மூன்று பேருக்கு மேல் தொற்றால் பாதிக்கப்பட்டால், அவை கட்டுப்பாடு பகுதியாக அடையாளம் காணப்படுகிறது. அதன்படி, 99 தெருக்கள் உள்ளன. தொற்று பாதிப்புக்கு ஏற்ப, கட்டுப்பாடுகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் படிக்க

எளிய வழிமுறை: கொரோனாவைக் கண்டறிய உப்புத் தண்ணீரே போதும்!

பள்ளிகளைத் திறப்பதில் அவசரம் வேண்டாம்: விஞ்ஞானி எச்சரிக்கை

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)