நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 May, 2022 12:25 PM IST
Revived Maduravayal Flying Road Project..

போக்குவரத்து நெரிசல் காரணமாக, சென்னை துறைமுகம் செல்லும் சரக்கு வாகனங்கள் ஆந்திராவில் உள்ள துறைமுகங்கள் வழியாக பல ஆண்டுகளாக செல்கின்றன. இதனால் தமிழக வருவாய் பாதிக்கப்பட்டது. இதை தவிர்க்க கடந்த 2007ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு மதுரையில் இருந்து எண்ணூர் துறைமுகம் வரை ரூ.1655 கோடியில் மேம்பாலம் கட்ட முடிவு செய்தது.

இதையடுத்து, மதுரவாயல் - எண்ணூர் துறைமுகத்தை இணைக்கும் வகையில், 20 கி.மீ., நீளம், 20 மீ., அகலத்தில், மேம்பாலம் அமைக்க, 2007ல் ஒப்புதல் பெறப்பட்டது. இந்த திட்டத்திற்கு 2009 ஜனவரியில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்தது. இதையடுத்து மதுரவாயல் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கி தூண்கள் அமைக்கப்பட்டன.

தொடர்ந்து அதிமுக ஆட்சியில் இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன. கூவம் ஆற்றில் தூண்கள் அமைப்பதால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் என்று கூறி திட்டத்தை ஜெயலலிதா நிறுத்தி வைத்தார். இந்நிலையில், சென்னை துறைமுகம்-மதுரவாயல் மேம்பாலம் திட்டத்தை லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் மறுவடிவமைப்பு செய்து இரண்டு மேம்பாலங்கள் அமைக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்திருந்தார். தமிழக பட்ஜெட்டில் பறக்கும் சாலை திட்டத்தை செயல்படுத்த 5770 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை கையெழுத்தானது. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுகக் கழகம் மற்றும் இந்திய கடற்படை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி ரூ.5,855 கோடியில் 20.56 கி.மீ தூரத்திற்கு மேம்பாலம் திட்டம் செயல்படுத்தப்படும். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இதற்கான பணிகளை மேற்கொள்ள உள்ளது.

இத்திட்டத்தில் சிவானந்தா சாலையில் இருந்து கோவை வரை இரட்டை மேம்பாலம் அமைக்கப்படும். கீழ் அடுக்கு உள்நாட்டு வாகனங்களுக்கும், மேல் அடுக்கு துறைமுகம் செல்லும் வாகனங்களுக்கும் பயன்படுத்தப்படும். இப்பணியை துவங்கி 30 மாதங்களுக்குள் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் 26ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும் படிக்க:

சென்னை மதுரவாயல்-துறைமுகம் மேம்பாலச் சாலை திட்டம் தொடக்கம்!

இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் டபுள் டக்கர் பாலம்!

English Summary: Revived Maduravayal Flying Road Project. Chief Minister Stalin signs Agreement!
Published on: 17 May 2022, 12:25 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now