வருடத்திற்கு 4000 குவிண்டால்- உருளை சாகுபடியில் அசத்தும் உ.பி. விவசாயி ! அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 23 September, 2022 6:16 PM IST
Paddy Seeds

கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை வேளாண் அதிகாரி சிறு, குறு விவசாயிகள் வாங்கி பயன்பெறும் வகையில் பாரம்பரிய விதை நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதானமாக செய்யப்படுகிறது. இதற்கு அடுத்தப்படியாக நெல், நிலக்கடலை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பெய்துவரும் தென் மேற்கு பருவமழையின் காரணமாக ஆனைமலை பகுதியில் உள்ள நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. மேலும், நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் நெல்லை பயிரிட தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் ஆனைமலை வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள நெல் விதைகளை வாங்க வருமாறு வேளாண் அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குனர் விவேகானந்தன் கூறுகையில், “ஆனைமலை வேளாண்மை விரிவாக்க மையத்தில் பாரம்பரிய நெல் வகைகள் 200 கிலோ இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதில் கருப்பு கவுனி 60 கிலோ மற்றும் சீரக சம்பா 140 கிலோ விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

வெளிச்சந்தையில் 25 ரூபாய்க்கு விற்கப்படும் பாரம்பரிய விதை நெல் அரசு மானிய விலையில் 12 ரூபாய் 50 காசுகளுக்கு வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு 10 கிலோ வரை நெல் விதைகள் வழங்கப்படுகிறது. இதனை சிறு, குறு விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்க:

அரசு: குருவை பயிர் விதைகளுக்கு 90 முதல் 100% மானியம்

விவசாயிகளுக்கு தீபாவளிக் பரிசு, அரசு 35,250 ரூபாய் வழங்கும்

English Summary: Rice seeds for farmers at government subsidized prices, details!!
Published on: 23 September 2022, 06:16 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now