மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 28 April, 2022 3:45 PM IST
Textile manufacturers decide to go on strike....

நூல் விலையை கட்டுப்படுத்தாவிட்டால் ஜவுளி உற்பத்தியை நிறுத்திவிட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர்கள் முடிவுசெய்துள்ளனர்.

கரூரில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன், தொடர் நூல் விலை உயர்வால் ஜவுளி உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.

இதையறிந்த மத்திய அரசு பருத்தி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரியில் இருந்து முற்றிலும் விலக்கு அளித்து உத்தரவு பிறப்பித்தது. இதன் மூலம் பருத்தி வரத்து அதிகரித்து இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நூல் உற்பத்தியாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்த நூலை சந்தைப்படுத்தாமல் இருப்பு வைத்து வருகின்றனர். இதனால் சந்தையில் தேவையான நூல் கிடைப்பதில்லை. இதனிடையே நூல் ஏற்றுமதிக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது.

இதனால் மானியத்தை நிறுத்தி, ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும் எனவும், அப்போதுதான் சந்தைக்கு நூல் வரத்து சீராக இருக்கும் என்றும் கூறுகின்றனர். இதன் மூலம் தயாரிப்பை இயற்கையான முறையில் இயக்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

ஆனால், நூல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தற்போதைய சூழ்நிலையில், ஏற்கனவே ஒப்புக்கொண்ட ஆர்டர்களாலும், புதிய ஒப்பந்தங்கள் பெற முடியாமல் தடுமாறி வருவதால், ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை தொடர முடியாமல், தி.மு.க. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு சந்தையில் தேவையான நூல் கிடைக்க ஆவண செய்ய வேண்டும்.

அப்படி இல்லாவிட்டால் இன்னும் இரண்டு வாரத்தில் கடையை நிரந்தரமாக மூட ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் முடிவு செய்துள்ளோம்.

வேலைநிறுத்தத்தால் கரூரில் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாகவும், மறைமுகமாக வேலைவாய்ப்பு பெறும் 10,000 பேர் இதனால் பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிறுத்தத்தை தொடர்ந்தால் ஏப்ரல், மே மாதங்களில் வரும் அனைத்து ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்படாது. இதனால் சுமார் 1500 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க:

பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்!

ஆர்கானிக் பருத்தி உற்பத்தி உயர்வு: முன்னணியில் இரு மாநிலங்கள்!

English Summary: Rise in yarn prices: Textile manufacturers decide to go on strike!
Published on: 28 April 2022, 03:45 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now