நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 21 June, 2022 7:48 PM IST
Risky Credit Apps

இன்றைய தொழில்நுட்ப உலகில் அனைத்துமே எளிதாகி விட்டது. ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சியால் ஆபத்தும் மிக எளிதாக நம்மை நெருங்குகிறது. இதில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள, விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். அவசரத் தேவைக்காக சிலர் ஆன்லைன் செயலிகளில் கடன் வாங்குகின்றனர். ஆனால், அதில் அதிக ஆபத்து உள்ளதாக தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆன்லைன் செயலியில் கடன் வாங்கிவிட்டு சிலர், மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளவும் துணிகின்றனர். இந்நிலையில், கடன் வழங்கும் செயலிகள் மிகவும் ஆபத்தனவை என்றும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும், தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார்.

எச்சரிக்கை (Warning)

டிஜிபி சைலேந்திர பாபு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், “சமீபகாலமாக கடன் வழங்கும் செயலிகள் அதிகரித்து வருகிறது. இந்த ஆன்லைன் கடன் செயலிகளில் கடன் பெற, உங்கள் புகைப்படத்துடன் விண்ணப்பிக்க சொல்வார்கள். உங்கள் தொலைபேசியில் உள்ள தொடர்பு எண்களில் சிலரைப் பற்றிய தகவல்களை கேட்பார்கள். உங்களுடைய புகைப்படத்தை ஆபாசமாக மார்ஃபிங் முறையில் சித்தரித்து, உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு அனுப்பி விடுவோம் என மிரட்டி உங்களிடம் பணம் வசூலிப்பார்கள. இதனால், மன உளைச்சல் ஏற்பட்டு, நிம்மதியை இழப்பீர்கள். இந்தப் புகைப்படம் உண்மை இல்லை என்றாலும், யாரும் இதை நம்பமாட்டார்கள்.

இப்படி ஒரு இக்கட்டான நிலைமையில், உங்களை சிக்க வைத்து பணம் வசூலிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக காவல் நிலையத்திற்கு அதிகளவில் புகார்கள் வருகிறது. காவல்துறை மூலம் இந்த மோசடி செயலிகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என்ன தான் இந்த செயலிகளை நாங்கள் முடக்கினாலும், புதிய பெயர்களில் இந்த கடன் செயலிகள் வந்து கொண்டு தான் இருக்கும். பொதுமக்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

கடன் செயலிகள் (Loan Apps)

மக்கள் யாரும் ஏமாறக் கூடாது என்பதற்காக சில செயலிகளை சொல்கிறேன். Euvalt, Masen Rupee, Lory loan, Wingo Loan, cici Loan மற்றும் City cash ஆகிய செயலிகள் மோசடியான செயலிகள். இவற்றை ஒருபோதும் பதிவிறக்கம் செய்து விடாதீர்கள். ஒருவேளை உங்கள் போனில் இந்த செயலிகள் இருந்தால் உடனடியாக நீக்கி விடுங்கள். இனியாவது பாதுகாப்பாக இருங்கள் என்று டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க

கடன் மோசடியில் ஆன்லைன் செயலிகள்: அச்சத்தில் இந்தியர்கள்!

கூகுள் மேப்பில் புதிய வசதி: காற்றின் தரம் அறியலாம்!

English Summary: Risky Credit Apps - Tamil Nadu DGP Warns!
Published on: 21 June 2022, 07:48 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now