மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 3 September, 2019 3:46 PM IST

விவசாகிகளை மகிழ்விக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டுபிடுப்புகள், தொழில்நுட்பங்கள், செயலிகள் சந்தையில் வந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் ரிவுலிஸ் நீர்ப்பாசன நிறுவனம், மன்னா என்னும் செயலியை அறிமுக படுத்தி உள்ளது.

இஸ்ரேலின் நுண் நீர்ப்பாசனத்தை அடிப்படையாக கொண்டு ரிவுலிஸ் நிறுவனம் செயற்கை கோள் மூலம் செயல்படும் செயலியை விவசாகிகளுக்காக வடிவமைத்துள்ளனர். இந்த செயலி நீர்ப்பாசனம் மற்றும் நீர் மேலாண்மையை திறம்பட கையாளுவதற்கு பயன்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் நிலவிவரும் நீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு அந்தந்த இடத்தின் நீர்வளம், காலநிலை, இவ்வயனைதையும் கணக்கிட்டு சரியானவற்றை இந்த செயலி பரிந்துரைக்கும். தற்போது இந்த நிறுவனம் மகாராஷ்டிரா, கர்நாடக, குஜராத், உத்திர பிரேதேசம் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் செயல்பட உள்ளது.

முதல் கட்டமாக பருத்தி, கரும்பு, மாதுளை, திராட்சை, தக்காளி போன்றவைகளின் மீது  செயல்  பட உள்ளது. பின்னர் மற்ற பயிர்களின் மீது பயன்படுத்த உள்ளனர்.  இந்த தொழில் நுட்பமானது, 5 sq கி.மி  நிலப்பரப்புக்கு தேவையான நீர் பாசனம்,  எப்போது செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும், நீர் ஆவியாகுதல் போன்ற பதிவுகளை மிகவும் துல்லியமாக தரவல்லது.

விவசாகிகள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் நீர் பாசனமும் ஒன்று. ஒவ்வொரு பயிருக்கும் நீரின் தேவை மாறுபடும். இருப்பினும் எல்லா விதமான  பயிருக்கும் போதுமான அளவு நீர் கிடைப்பதில்லை. மன்னா என்னும் இந்த செயலி அறிவியல் ரீதியாக விடையளிக்கிறது. எதிர் வரும் காலங்களில் பயிர்களுக்கு தேவைப்படும் நீரின் அளவு போன்றவற்றை விவாசகிகள் முன்பே அறிவதால் அவர்களுடைய இழப்பு தடுக்கப் படுகிறது, என அதன் இயக்குனர் கூறினார். 

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Rivulis Irrigation Launches of “Manna App" for Indian Farmers
Published on: 03 September 2019, 03:04 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now