News

Tuesday, 24 January 2023 10:58 AM , by: R. Balakrishnan

1000 rs for Women

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடந்த பட்ஜெட்டில், அரசின் எந்த உதவித் தொகையும் பெறாத, 21 முதல் 55 வயதிற்கு உட்பட்ட, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.
இத்திட்ட துவக்க விழா, நேற்று மாலை கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது.

1,000 ரூபாய் (1,000 rs)

முதல்வர் ரங்கசாமி முன்னிலையில், கவர்னர் தமிழிசை தலைமை தாங்கி, குடும்ப தலைவிக்கு 1,000 ரூபாய் மாதாந்திர உதவித் தொகை வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். விழாவில், சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், ரமேஷ் எம்.எல்.ஏ., துறை செயலர் உதயகுமார், இயக்குனர் முத்துமீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இத்திட்டம் முதலில், 17ஆயிரம் பேருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. தகுதியான பயனாளிகள்அதிகம் இருந்ததால், தற்போது 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் அரசுக்கு மாதம் 5 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.

மேலும் படிக்க

நெல் விவசாயிகளுக்கு நற்செய்தி: அதிகரிக்கப்படும் நெல் கொள்முதல் நிலையங்கள்!

மூத்த குடிமக்களுக்கு மத்திய அரசின் அருமையான பென்சன் திட்டம் இதோ!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)