நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 May, 2022 10:52 AM IST

திருப்பூரில் பிச்சை எடுக்க வந்த நபரை நாளொன்றுக்கு ரூ.400 சம்பளத்தில் வேலை தருகிறேன் செய்ய விருப்பமா? என்று கேட்ட வியாபாரியிடம் உனக்கு 2 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருகிறேன் நீ பிச்சை எடுக்க வா என அழைத்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் கடைவீதியில் ஏராளமான நபர்கள் தினமும் பிச்சை எடுப்பது வழக்கம். இந்நிலையில் சாட்டையால் அடித்துக் கொண்டு பிச்சை எடுத்த நபர் ஒருவர் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் பிச்சை வாங்கச் சென்றுள்ளார்.

அப்போது, அந்தக் கடையின் உரிமையாளர், கை கால்கள் நன்றாக தானே இருக்கிறது, என் கடைக்கு வேலைக்கு வா சம்பளம் தருகிறேன் என கூறி உள்ளார். சம்பளம் எவ்வளவு தருவாய் என அந்த பிச்சை எடுக்கும் நபர் கேட்டபோது 400 ரூபாய் ஒரு நாளைக்கு தருகிறேன் என பதிலளித்துள்ளார்.

அதற்கு அந்த பிச்சை எடுத்த நபரோ, 400 ரூபாய்க்கு நான் வேலை செய்ய வேண்டுமா? நான் ஒரு நாளைக்கு 2000 சம்பாதிக்கிறேன் என ஏளனமாக பதில் அளிக்கிறார். அதற்கு உரிமையாளர், இரக்கப்பட்டு இப்படி ஓசில கொடுக்கக் கொடுக்க நீ சம்பாதிக்க தான் செய்வாய் என கூறுகிறார்.

பிச்சை கொடுப்பதாக இருந்தால் இருக்கு என சொல்லுங்கள். இல்லை என்றால் இல்லை என சொல்லுங்கள். நீ வா என்னோடு உனக்கு 2000 தருகிறேன் எனக் கூறியபடி அந்த பிச்சை எடுக்கும் நபர் அங்கிருந்து செல்கிறார். கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகிய இந்த காட்சிகள் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க...

இனிப்புக்காக உலர் திராட்சை -ஆரோக்கியத்திற்கு அத்தனை கேடு!

சொர்ணவாரி சாகுபடிக்குச் சிக்கல்-விவசாயிகள் வேதனை!

English Summary: Rs 2,000 daily salary for begging - shocking offer!
Published on: 12 May 2022, 10:49 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now