மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 August, 2022 7:55 AM IST

ஆதார் கார்டுதாரர்களுக்கு மத்திய அரசு 4.8 லட்சம் ரூபாய் வழங்குவதாக ஒரு தகவலர் வேகமாகப் பரவி வருகிறது. இந்தத் தகவல் உண்மையானதா? என்பதைத் தெரிந்துகொள்ள உள்ளே சென்று படியுங்கள்.

இந்தியர்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு மிக அவசியமான ஆவணமாக இருக்கிறது. இந்நிலையில், ஆதார் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் மத்திய அரசு நிதியுதவி வழங்குவதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது.

பரபரப்பு தகவல்

அதாவது, ஆதார் கார்டு வைத்திருக்கும் நபர்களுக்கு மத்திய அரசு 4.78 லட்சம் ரூபாய் கடன் வழங்குவதாக அறிவித்துள்ளது என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மத்திய அரசு விளக்கம்

இந்நிலையில், ஆதார் கார்டுதாரர்களுக்கு 4.8 லட்சம் ரூபாய் கடனை மத்திய அரசு வழங்குவதாக பரவு செய்தி பொய்யானது என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இதுபோன்ற எந்த அறிவிப்பையும் நிதியமைச்சகம் வெளியிடவில்லை என மத்திய அரசின் கீழ் இயங்கும் பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை

அதாவது ஆதார் வைத்து 4.8 லட்சம் ரூபாய் கடன் பெறுவதற்கு ஒரு Linkஐ கிளிக் செய்து பதிவு செய்துகொள்ளும்படி கூறப்பட்டுள்ளது. இது மோசடி கும்பல்கள் பயன்படுத்தும் யுக்தி என்பதால் linkஐ கிளிக் செய்யாமல் இருப்பது நல்லது.

ரூ.4.8 லட்சம் 

ஆதார் கார்டுக்கு 4.8 லட்சம் ரூபாய் கடன் கிடைக்கும் என்ற தகவல் பொய்யானது எனவும், இதுபோன்ற எந்த அறிவிப்பையும் நிதியமைச்சகம் வெளியிடவில்லை எனவும், இந்த பொய் செய்தியை மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டாம் எனவும், சொந்த விவரங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் எனவும் பத்திரிகை தகவல் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க...

தேசத்தின் சிறந்த முதல்வர்கள் பட்டியல் - 3ம் இடத்தில் மு.க.ஸ்டாலின்!

ஆதரவற்றப் பெண்களின் திருமணத்துக்கு ரூ.50,000 நிதியுதவி!

English Summary: Rs 4.8 lakh for Aadhaar card holders?
Published on: 17 August 2022, 06:18 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now