News

Monday, 18 July 2022 11:51 AM , by: Elavarse Sivakumar

சென்னையில், தங்கம் விலை சவரனுக்கு 496 ரூபாய் குறைந்திருப்பது, வாடிக்கையாளர்களையும், முதலீட்டாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆவணி மாதத்தில் திருமணம் நடத்தத் திட்டமிட்டிருப்பவர்களுக்கு இந்த விலை வீழ்ச்சி, பலன் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 8 நாட்களாக தங்கத்தின் விலை ஏறி, இறங்கி வருகிறது. குறிப்பாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலையில், தற்போது மாற்றம் காணப்படுவது சிறு ஆறுதலாக உள்ளது.

விலையில் வீழ்ச்சி

ரஷ்யா- உக்ரைன் போர் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பியது. இதனால், போர் தொடங்கியது முதலே தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நிலவி வருகிறது. பெரும்பாலும் விலை அதிகரித்து வந்தது. இதனிடையே பங்குச்சந்தைகளில் உயர்வு தொடர்வதால், தங்கம் விலையில் வீழ்ச்சி காணப்படுகிறது.

496 ரூபாய்

கடந்த 10ம் தேதி ரூ.4,689ஆக இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை, நேற்று ரூ.4,627 ஆக இருந்தது. அதாவது கிராமுக்கு 62 ரூபாய் வீதம், சவரனுக்கு 496 ரூபாய் குறைந்திருந்தது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

உயர்வு

இந்நிலையில் எதிர்பார்ப்புக்கு மாறாக, இன்று தங்கத்தின் விலையில் திடீர் உயர்வு காணப்படுகிறது. அதாவது ஒரேநாளில் சவரனுக்கு ரூ.160 ரூபாய் வீதம், கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்துள்ளது. தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு, தங்க நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க...

குறைந்தது எண்ணெய் விலை-இல்லத்தரசிகளுக்கு நிம்மதி!

ரூ.63,000 சம்பளத்தில் இந்திய அஞ்சல் துறையில் வேலைவாயப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)