News

Monday, 14 March 2022 07:56 AM , by: Elavarse Sivakumar

ஹோலி பண்டிகைக்கு முன்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு மிகப் பெரிய அளவில் சலுகை அளிக்க காத்திருக்கிறது. இதன்படி, ஊழியர்களின் சம்பளம் 1000 ரூபாய் முதல் 8000 ரூபாய் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராணுவத்தினர்

ஹோலி பண்டிகைக்கு முன்பாக, ராணுவத் துறையின் சிவில் ஊழியர்களுக்கான ரிஸ்க் அலோவன்ஸை (Risk allowance)அதிகரிக்க மத்திய மோடி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.ஊதியக் குழுவின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்பட உள்ளது.

ராணுவத் துறையில் பணியாற்றி வரும் பல்வேறு வகையான சிவில் ஊழியர்களுக்கு இந்த சலுகை கிடைப்பது நிச்சயம். பதவிக்கு ஏற்ப சம்பளச் சலுகையும் மாறுபடும். இந்த சிறப்பு சலுகையைக் வருடாந்திர அடிப்படையில் கணக்கிட்டால், ஊழியர்களின் சம்பளம் ஆண்டுக்கு 8000 ரூபாய் வரையில் உயரும். இந்த பிரிவில் வரும் ஊழியர்களின் அலோவன்ஸின் கீழ், திறமையற்ற பணியாளர்களுக்கு மாதம் 90 ரூபாய் risk allowanceசாக வழங்கப்படும்.

இது தவிர, செமி குஷன் பணியாளர்களுக்கு ரூ.135ம், திறமையான பணியாளர்களுக்கு ரூ.180ம், அரசிதழ் அல்லாத அதிகாரிகளுக்கு ரூ.408ம், கெசட்டட் அதிகாரிகளுக்கு ரூ.675 வீதமும் மாதந்தோறும் இந்த உதவித்தொகை வழங்கப்படும். இது எப்போது கிடைக்கும் என்பது குறித்த விபரங்களை அரசு விரைவில் அறிவிக்க உள்ளது.

மேலும் படிக்க...

SBI வாடிக்கையாளரா? இனி அதிக வருமானம் நிச்சயம்!

சமையல் எண்ணெய் விலை ரூ.200 யை நெருங்கும் ஆபத்து!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)