மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 25 November, 2020 11:48 AM IST

நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தில் சேர்ந்து பயனடையுமாறு கரூர் மற்றும் லேசம் மாவட்ட மக்களுக்கு ஆட்சியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது: 

  • ஒரு ஒன்றியத்துக்கு தலா 2 அல்லது 3 பயணாளிகள் வீதம் 20 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  • விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

  • தேர்வு செய்யப்படுவோருக்கு கோழிவளர்ப்பு, மோலாண்மை பயிற்சி 5நாட்கள் வழங்கப்படும்.

  • ஒவ்வொரு பயனாளியும் 1000 எண்ணிக்கையில் நாட்டுக் கோழிக்குஞ்சுகளை ரூ.30,000க்கு கொள்முதல் செய்ய வேண்டும்.

  • கொள்முதல் செய்த பின்னர், மானியமாக 50 சதவீதம் அதாவது ரூ.15,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

  • அதேபோல், 1500 கிலோ கோழித் தீவனம் ரூ.45.000க்கு கொள்முதல் செய்த பின்னர் ரூ.22.500 மானியமாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

  • மேலும் ரூ.75.000 மதிப்புள்ள குஞ்சு பொறிப்பான் கொள்முதல் செய்த பின்னர் அதற்கான பின்னேற்பு மானியமாக ரூ.37.500 வழங்கப்படும்.

  • இத்திட்டத்தில் பயன் பெற விரும்புவோர் தங்கள் அருகே உள்ள கால்நடை மருந்தகத்தின் உதவி மருத்துவர்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம்

இதேபோல் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 20 ஊராட்சிகளில் 5 முதல் 100 பயனாளிகள் தேர்வு செய்யப்பட இருப்பதாகவும், விருப்பமுள்ளவர்கள் உங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருந்தகம் மற்றும் உதவிமருத்துவரை அணுகி விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

80% அரசு மானியத்தில் அசத்தல் வியாபாரம்- முழு விபரம் உள்ளே!

தினமும் ரூ.160 செலுத்தி ரூ.23 லட்சத்தை அள்ளுங்கள்- LICயின் Money back Plan!

PM SVANidhi Mobile App மூலம் ரூ.10ஆயிரம் உடனடிக் கடன்-ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டம்!

English Summary: Rs. Grant up to Rs 75,000 - Karur, Salem District Collectors call!
Published on: 25 November 2020, 11:48 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now