மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 23 April, 2023 10:46 AM IST
1000 rs

மகளிருக்கு, 1,000 ரூபாய் உரிமைத் தொகை தரும் பணியை, கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்குமாறு, அரசிடம் கேட்கப்பட்டுள்ளது என, கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார். கூட்டுறவு துறை சார்பில், சட்டசபையில் வெளியிடப்பட்ட புதிய அறிவிப்புகளை செயல்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில், அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நேற்று நடந்தது.

கூட்டுறவு வங்கி (Co-operative society)

அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும், மக்களிடம் இருந்து, 71 ஆயிரத்து, 955 கோடி ரூபாய் வைப்பு தொகை பெறப்பட்டுள்ளது. கடனாக மொத்தம், 64ஆயிரத்து, 140 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. மக்களிடத்தில் வைப்பு தொகை பெறுவதிலும், அவர்களுக்கு நிதி உதவி செய்வதிலும், கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. வங்கி துறையில் போட்டிகள் நிறைந்துள்ளன. தனியார், தேசிய வங்கிகளுக்கு இணையாக கூட்டுறவு வங்கிகளிலும், அனைத்து சேவைகளும் கிடைக்கும்வகையில், தகவல் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

மகளிருக்கு, 1,000 ரூபாய்

மகளிருக்கு, 1,000 ரூபாய் உரிமை தொகை தரும் பணியை, கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்குமாறு, அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அதற்கு முன் வங்கிகளை நவீனமயமாக்கும் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும்.

விவசாய தொழில் சாராமல் வேறு பிரிவுகளில், 3.18 லட்சம் பேர் கடன் வாங்கி, திருப்பி செலுத்தாமல் உள்ளனர். அவர்கள், அபாரத வட்டி இல்லாமல், அசல் மற்றும் வட்டியை மட்டும் செலுத்தினால் போதும். இதனால், 1,300 கோடி நிலுவை கடன் வசூலாகும் என அவர் கூறினார்.

மேலும் படிக்க

பிக்சட் டெபாசிட் செய்ய வங்கிகளை விட தபால் அலுவலகம் தான் பெஸ்ட்: ஏன் தெரியுமா?

அதிக வருமானம் தரும் SBI-யின் சூப்பரான டெபாசிட் திட்டம்!

English Summary: Rs.1,000 for heads of households in cooperative banks: Minister important information!
Published on: 23 April 2023, 10:46 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now