சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 25 March, 2022 7:56 AM IST
Rs.1,000 / - per month for students going to Polytechnic and ITI

அரசு பள்ளிகளில் 6 - 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் (பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்மாணவிகள் பிற திட்டங்களில் உதவித்தொகை பெற்றிருந்தாலும், மாதம் ரூ.1000 வழங்கப்படும் எனவும் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில்,  பட்ஜெட் மீதான பதிலுரை இன்று நடைபெற்றது. அதில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மேலும் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அப்போது கல்லூரி மட்டுமல்லாமல் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு பாலிடெக்னிக், ஐடிஐ செல்லும் மாணவிகளுக்கும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது மாணவிகளிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதாவது அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பு முடித்து பாலிடெக்னிக், ஐடிஐ செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் வகையில் மூவலூர் ராமாமிர்த அம்மையார் உயர்கல்வி திட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்றுக் கூறினார்.

தவறு செய்தவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும். டாஸ்மாக் கணினி மயமாக்கப்படும். வணிகவரித்துறையில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்.

அனைத்து தரப்பின் கருத்துகளுக்கு மதிப்பளித்து தமிழக அரசு செயல்படுகிறது. தமிழக அரசு நியமித்த குழு வேறு எந்த நாட்டிலும் இல்லை. தமிழகத்தில் 90 சதவீதம் குடும்பத்திற்கு மேல் மொபைல்போன் வைத்திருக்கிறார்கள். தமிழகம் ஏழை மாநிலம் அல்ல வளர்ந்த மாநிலம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

மேலும் படிக்க...

இதைக் குடித்தால், வெயிலுக்கும் Goodbye- அதிக Weightக்கும் Goodbye!

தூக்கத்தைத் தொலைத்தவரா நீங்கள்? இந்த ஒரே பானம் போதும்!

English Summary: Rs.1,000 / - per month for students going to Polytechnic and ITI
Published on: 24 March 2022, 04:03 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now