News

Thursday, 27 October 2022 07:01 PM , by: T. Vigneshwaran

Jan Dhan

அவசர தேவைக்கு பணம் எடுக்கும் வகையில் ரூ. 10 ஆயிரம் கிடைக்கக்கூடிய திட்டமாக பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் (Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY)) உள்ளது.
இந்தத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2014 ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கினார்.

இந்தக் கணக்கு தொடங்கியவர்களுக்கு, ரூபே கார்டும் வழங்கப்படும். இதன் மூலம் ஏடிஎம்மில் பணம் எடுப்பது, ஷாப்பிங் போன்றவற்றுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
இது ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் என்பதால் ஜன் தன் யோஜனா கீழ் தொடங்கப்படும் கணக்குகளின் என்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்தத் திட்டத்தில் ரூ.10 ஆயிரம் வரை ஒவர் டிராப்ட் வழங்கப்படுகிறது. முன்னர் இது ரூ.5 ஆயிரமாக இருந்தது. தற்போது இது ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் வங்கி கணக்கு தொடங்கி 6 மாதங்களுக்குள் மட்டும் ஆகியிருந்தால் ரூ.2 ஆயிரம் வரை பெற்றுக் கொள்ளலாம்.

தற்போது ஓவர் ட்ராஃப் பெறும் வயது 60இல் இருந்து 65 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கணக்கின் மூலம் விபத்து காப்பீடு உள்ளிட்ட பல திட்டங்களை பெறலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள இந்திய வங்கிகளில் ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் கணக்கு தொடங்கலாம்.

மேலும் படிக்க:

வெறும் ரூ.399க்கு 10 லட்சம், என்ன திட்டம் தெரியுமா?

தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜன் சதய விழா

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)