News

Friday, 06 January 2023 06:55 AM , by: R. Balakrishnan

Pongal Gift Token Distribution

தமிழ்ர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 9ஆம் தேதி பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அன்றைய தினமே தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

பொங்கல் பரிசு டோக்கன் (Pongal Gift Token)

வீடு வீடாக ரேஷன் கடை பணியாளர்கள் சென்று பொங்கல் தொகுப்பு டோக்கன்களை வழங்கும் பணியை தொடங்கியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 1,183 ரேஷன் கடைகளில் உள்ள 7 லட்சத்துக்கும் மேற்பட்ட அரிசி அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று பொங்கல் தொகுப்பு டோக்கனை விநியோகம் செய்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 200 டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பணி வருகிற 8ஆம் தேதி வரை நடைபெறும். இந்த டோக்கனில் பரிசு தொகுப்பு வழங்கும் நாள், வழங்கப்படும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளது. அந்த நேரத்தில் சென்று பொங்கல் தொகுப்புகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்பில் ஏதாவது குறை இருந்தால் அது குறித்து புகார் தெரிவிக்க சேவை எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றவுடன் அது குறித்த குறுஞ்செய்தி குடும்ப அட்டைதாரர்களின் செல்போன் எண்களுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இந்த பணியில் 100க்கும் மேற்பட்ட ரேஷன் கடை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மற்ற மாவட்டங்களிலும் பொங்கல் பரிசு டோக்கன் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க

பொங்கல் பரிசு ரூ.1000 பெற இது கட்டாயம்: ரேஷனில் ராகி விற்பனை: அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

விவசாயிகளுக்கு ரூ.10,000 வரை ஊக்கத்தொகை: உடனே விண்ணப்பிக்கவும்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)