பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 10 July, 2022 7:51 AM IST

அரசு கல்லூரி மாணவிகளுக்கான ரூ.1000 உதவித்தொகை இந்த மாதம் கிடைக்காது எனத் தெரிகிறது. இதற்காக 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் விண்ணப்பித்துள்ள நிலையில், அடுத்த மாதம்தான் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் எனத் தெரிகிறது.

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவிகள், உயர்கல்விக்கு செல்ல ஏதுவாகவும், படிப்பு இடைநிற்றலைத் தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவிகள் அரசு கல்லூரிகளில் உயர்கல்வியில் சேர்ந்தால், அவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகையை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிபந்தனை

குறிப்பாக இந்த மாணவிகள் உயர்கல்வி நிறுவனங்களான கலை அறிவியல் கல்லூரி அல்லது தொழில் படிப்பில் சேரும்போதுதான், தமிழக அரசின் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தில் பயன்பெற முடியும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த உதவித்தொகை மாணவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உயர்கல்வித்துறை சமீபத்தில் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அதில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்ததற்கான சான்று, கல்லூரி அடையாள அட்டை, ஆதார், வங்கிக்கணக்கு உள்ளிட்டவற்றை மாணவியரிடம் இருந்து பெற வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது.

2.2 லட்சம் பேர்

மாணவிகள் தங்களது கல்லூரிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் அல்லது நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம் என்று இணையதள முகவரி தெரிவிக்கப்பட்டது. அதன்படி இதுவரை 2.2 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இந்த மாணவிகளுக்கு ரூ.1000 பணம் எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பெற்றோர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்த மாதம் கிடையாது

 

கல்வி வளர்ச்சி நாளான ஜூலை 15-ந்தேதி முதல் ரூ.1000 கிடைக்கும் என்று தகவல் வெளியான நிலையில் இப்போது அன்றைய தினம் திட்டம் தொடங்கி வைக்கப்படாது என தெரிகிறது.

எப்போது?

ஆகஸ்டு மாத இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் திட்டம் தொடங்கப்பட்டு அப்போது முதல் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க...

33 மாத சம்பளம் ரூ.24 லட்சத்தை திருப்பிக்கெடுத்த மனசாட்சியுள்ள ஆசிரியர்!

அடுத்த வாரம் குறைகிறது சமையல் எண்ணெய் விலை!

English Summary: Rs.1000 scholarship for college girls - not available this month!
Published on: 10 July 2022, 07:51 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now