மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 30 November, 2022 10:39 PM IST
Urea Subsidy

காரிப் பருவத்தின் தொடக்கத்திலேயே விவசாயிகளுக்கு யூரியாவின் தேவை அதிகமாக இருப்பதால், விவசாயிகள் எளிதில் உரம் கிடைக்காமல் தவிக்கின்றனர். இப்பிரச்னையை போக்க விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உரம் கிடைக்கும் வகையில் மத்திய அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.

யூரியா மானியம்

யூரியாவை கள்ளச் சந்தைகளில் விற்பனை செய்ததால் சுமார் 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான மானியம் உரிய விவசாயிகளுக்கு சென்றடையவில்லை. இதுபோன்ற பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, யூரியா மானியத் திட்டத்தில் மாற்றங்களைச் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் யூரியா மானியம் உரிய விவசாயிகளுக்கு சென்றடைவதுடன், அவர்களுக்கு குறைந்த விலையில் உரம் கிடைக்க வழிவகை செய்ய முடியும்.

ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் புள்ளி விவரங்களின்படி, தொழிற்சாலை பயன்பாட்டிற்கு சுமார் 13 முதல் 14 லட்சம் டன் யூரியா தேவைப்படுகிறது. அதில் 1.5 லட்சம் டன் யூரியா மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் 2 லட்சம் டன் யூரியா இறக்குமதி செய்யப்படுகிறது. இன்னும் தேவையைப் பூர்த்தி செய்ய 10 லட்சம் டன் யூரியா தேவை. இதன் மூலம் மீதி யூரியா எங்கிருந்து வருகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

வெளிநாட்டில் இருந்து யூரியாவை இறக்குமதி செய்யாமல் இருக்க, விவசாயிகளுக்குக் கிடைக்கும் யூரியாவை நிறுவனங்கள் வாங்குகின்றன. விவசாயிகளுக்குக் கிடைக்கும் யூரியாவுக்கு அரசு பெரும் மானியம் தருகிறது. தவறு செய்த நிறுவனங்கள் மீது உரத் துறை அதிகாரிகள் நாடு தழுவிய அளவில் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். கடந்த சில மாதங்களில் ரூ.100 கோடிக்கும் அதிகமான மானியங்கள் தவறான நபர்களுக்கு சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அரசு மானியம்

உண்மையில், இந்தியாவில் உள்ள பெரும்பாலான உரங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதன் காரணமாகவும் அதன் விலை அதிகமாக உள்ளது. யூரியாவின் விலை அதிகமாக இருப்பதால் விவசாயிகள் அதை வாங்க முடிவதில்லை. இதற்கு மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவி செய்கிறது. மத்திய அரசு விவசாயிகளுக்கு ஒரு மூடைக்கு (45 கிலோ) ரூ.266 மானிய விலையில் யூரியா வழங்குகிறது.

அதே சமயம், இந்த ஒரு மூடைக்கு 2,700 ரூபாய்க்கு மேல் அரசு மானியம் வழங்குகிறது. இதன் மூலம் ஒரு விவசாயி யூரியா சொசைட்டியில் சாக்கு வாங்கினால் அவருக்கு உதவியாக 2700 ரூபாய் வழங்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகள் பண நெருக்கடி இல்லாமல் விவசாயம் செய்ய முடியும். இதுபோன்ற நிறைய மானிய உதவிகளை மத்திய அரசு விவசாயிகளுக்கு செய்து வருகிறது. பிஎம் கிசான், பயிர் காப்பீடு உள்ளிட்ட திட்டங்களும் விவசாயிகளுக்கு உதவியாக உள்ளன.

மேலும் படிக்க

இனி ஞாயிற்றுக் கிழமையிலும் இந்த வங்கி இயங்கும்: விடுமுறையில் மாற்றம்!

பொங்கல் பரிசு 2023: தமிழக அரசின் புதிய திட்டம்!

English Summary: Rs.2700 subsidy to buy urea: central government helps farmers!
Published on: 30 November 2022, 10:39 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now