News

Thursday, 08 September 2022 11:31 AM , by: Elavarse Sivakumar

மின் கட்டணம் என்பது அண்மைகாலமாக கணிசமாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதில், முதல் 100 யூனிட்டுகள் இலவசம் என்பது மட்டுமே சற்று ஆறுதல் தருகிறது.

இந்நிலையில், கூலித் தொழிலாளி ஒருவருக்கு ரூ.95 ஆயிரம் ரூபாய் மின்கட்டணம் வந்திருப்பது அவரை மட்டுமல்லாமல், அந்த பகுதி மக்கள் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

கூலித்தொழிலாளி

ஈரோடு மாவட்டம் மல்குத்திபுரம் தொட்டியை சேர்ந்தவர் ரேவண்ணா. 40 வயதான இவர் கூலிவேலை செய்து வருகிறார். இவர் தனது வீட்டுக்கு 40 முதல் 50 யூனிட் வரையே மின்சாரம் பயன்படுத்தி வந்தார். ஒவ்வொரு வீட்டுக்கும் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் என்பதால் கடந்த சில ஆண்டுகளாக ரேவண்ணாவின் வீட்டுக்கு மின் கட்டணம் அதிகம் செலுத்தியதில்லை.

ரூ.95,000

இந்நிலையில் அவரது செல்போனுக்கு 94 ஆயிரத்து 985 ரூபாய் மின் கட்டணம் கட்ட வேண்டும் என குறுஞ்செய்தி வந்தது. இதை பார்த்த ரேவண்ணா அதிர்ச்சியாகியுள்ளார். பின்னர், அவர் தாளவாடி மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளிடம் இதுபற்றி கேட்டார். அதற்கு அவர்கள், 'மின்கட்டணம் கணக்கீடு செய்யும்போது குளறுபடி ஏற்பட்டிருக்கும். அதை சரிசெய்து தருகிறோம்' என தெரிவித்துள்ளனர்.இதையடுத்து அவர் நிம்மதி பெருமூச்சுவிட்டார்.

எது எப்படியோ அதிகாரிகள் கணக்கில் செய்யும் குளறுபடிகள், இவரைப் போன்ற பாமரமக்களை மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாக்குவது உண்மைதான். இதனைத் தடுக்க அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் படிக்க...

4 வயது குழந்தைகள் வேலைக்குத் தேவை - வித்தியாசமான விளம்பரம்!

பிள்ளையாருக்கு ரூ.316 கோடிக்கு காப்பீடு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)