நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 4 September, 2022 1:20 PM IST
100 days work

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MNREGA) என்பது இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் வேலை வழங்கும் உத்தரவாதத்தை வழங்குகிறது. இது 100 நாள் வேலைத் திட்டம் எனவும் அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பொது வேலை செய்ய விருப்பமுள்ள கிராமப்புற வயதுவந்த நபர்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

100 நாள் வேலை (100 days work)

கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.5 லட்சம் கோடி செலவிட்டுள்ளது. இதில், 20 சதவீதம் கொரோனா தொற்றுநோய் காலத்தில் செலவிடப்பட்டதாகும். தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் கடந்த 8 ஆண்டுகளில் 20 ஆயிரம் கோடி ரூபாய் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், "கடந்த எட்டு ஆண்டுகளில் MGNREGA திட்டத்தின் கீழ் தெலுங்கானாவுக்கு ரூ.20,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில் நாடு முழுவதும் ஐந்து லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டது. அதில் 2020-21ஆம் ஆண்டில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக செலவிடப்பட்டது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பணம் சரியாக செலவழிக்கப்படவில்லை என்ற புகார்கள் வந்தாலோ அல்லது தணிக்கை அறிக்கையில் ஏதேனும் கருத்து இருந்தாலோ, கணக்கெடுப்பு குழுக்கள் வரும்.

திட்டத்தை முடக்குவதற்கு ஆய்வுக் குழுக்கள் அனுப்பப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள், ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், அவற்றைச் சரிசெய்வதற்காக ஆய்வுக் குழுக்கள் அனுப்பப்படும் என்றார். மேலும் பேசிய அவர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் இத்திட்டத்தில் பல குறைபாடுகள் இருந்ததாகவும், அவை பிரதமர் நரேந்திர மோடியின் அரசால் நீக்கப்பட்டு, தற்போது நேரடி பலன் பரிமாற்றம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க

அஞ்சல் அலுவலகத்தில் முதலீடு செய்வதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை!

பிறந்த உடனே குழந்தை இறந்தாலும், மகளிருக்கு 60 நாட்கள் சிறப்பு விடுப்பு!

English Summary: Rural Employment Programme: Direct Benefit Transfer
Published on: 04 September 2022, 01:16 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now