நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 26 December, 2022 7:49 AM IST
Salary hike for Government employees

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியர் சங்க மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கலந்து கொண்டார். மேலும் ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவர் மொக்தியார் மஸ்தான், தணிக்கை குழு மாநில தலைவர், செயலாளர் மற்றும் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நிதிநிலை சீராகும்

மாநாட்டில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிப்படைத்தன்மை உடன் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார். கடந்த 10 ஆண்டுகளை போல் அல்லாமல் தற்போது நிதிநிலை சீரடைந்து வருகிறது. வரும் காலங்களில் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றி தரப்படும்.

சம்பள உயர்வு (Salary hike)

முக்கியமாக பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. தமிழகத்தின் நிதிநிலை சீரானதும் அனைவரது எண்ணமும் நிறைவேறும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார். இதன் தொடர்ச்சியாக அரசு ஊழியர்களுக்கு சம்பளமும் உயர்த்தப்படும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.

இந்த தகவல் அரசு ஊழியர்களுக்கு பெரிதும் நம்பிக்கையூட்டும் விஷயமாகவும், மகிழ்ச்சியூட்டும் விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. ஏனெனில் பழைய ஓய்வூதிய திட்டத்திற்காக பலகட்ட போராட்டங்களை அரசு ஊழியர்கள் தொடர்ச்சியாக நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் பழைய பென்சன் திட்டம் எப்போ தான் வரும்?

Beware: பென்சனர்களே உஷார்: இதை மட்டும் செய்யக்கூடாது!

English Summary: Salary hike for Tamil Nadu government employees: Important update given by the minister!
Published on: 26 December 2022, 07:49 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now