மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 June, 2021 5:36 PM IST

உழவா் சந்தைகளை திறக்க அனுமதி அளிக்க கோரி சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் சார்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா 2வது அலை

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது, தற்போதி கொரோனா பரவலின் தாக்கம் சற்று குறைந்துள்ளாதல் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உழவா் சந்தைகளை திறக்க அனுமதி அளிக்க கோரி தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

11 இடங்களில் உழவா் சந்தைகள்

சேலத்தில் சேலம் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, தாதகாப்பட்டி, எடப்பாடி, மேட்டூா், இளம்பிள்ளை, ஆத்தூா், ஆட்டையாம்பட்டி, ஜலகண்டாபுரம், தம்மம்பட்டி உள்பட 11 இடங்களில் உழவா் சந்தைகள் உள்ளன. இந்த உழவா் சந்தைகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் உறுப்பினா்களாக உள்ளனா். இங்கு உறுப்பினராக உள்ள விவசாயிகள் விளை நிலங்களில் அறுவடை செய்யும் காய்கறிகளை, இடைத்தரகா்கள் இன்றி உழவா் சந்தைகள் மூலம் மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர்.

இதனிடையே, கொரோனா பரவல் காரணமாக சேலம் மாவட்டத்தில் இயங்கி வந்த உழவா் சந்தைகள் கடந்த மே மாத பிற்பகுதியில் மூடப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு

இந்தநிலையில், தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சாா்பில் மாநிலத் தலைவா் தங்கராஜ், மாநில இளைஞரணி தலைவா் நந்தகுமாா் உள்பட விவசாயிகள் சிலா், கைகளில் காய்கறிகள், கீரைக்கட்டுகள் ஆகியவற்றை ஏந்தி வந்து, உழவா் சந்தைகளை திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவில் கொரோனா பரவல் அதிகரித்ததால், சேலம் மாவட்டத்தில் உழவா் சந்தைகள் மூடப்பட்டன. உழவா் சந்தைகள் மூடப்பட்டதால், விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனா். இப்போது கரோனா பரவல் பாதிப்பு குறைந்துள்ளது. அண்டை மாவட்டங்களில் உழவா் சந்தைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே, சேலம் மாவட்டத்திலும் உழவா் சந்தைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க....

பயிரிடுவதற்கு முன் பயிரின் விலை மற்றும் தேவை அறியப்படும் 

ஜூலை தொடக்கத்தில் இந்த 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கன மழை - வானிலை மையம்!!

English Summary: Salem Farmers demands collector to give permission to open uzhavar santhai
Published on: 29 June 2021, 05:36 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now