மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 April, 2021 6:30 PM IST
Credit : Dinakaran

வேதாரண்யத்தில் வெயிலின் தாக்கத்தால் உப்பு உற்பத்தி (Salt production) மும்முரமாக நடைபெற்று வருகிறது. நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல் வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு மழைக்காலம் முடிந்தவுடன், கடந்த பிப்ரவரி மாதம் உப்பு பாத்திகள் சரி செய்யப்பட்டு, உற்பத்தி தொடங்கி நடைபெற்று வருகிறது .

உப்பு உற்பத்தி

கடந்த 15 நாட்களாக வேதாரண்யம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் உப்பளங்களில் உப்பு உற்பத்திப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக, உப்புத் தொழிலாளர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது உழைத்து வருகின்றனர். வெயிலை சமாளிக்க, அதிகாலையிலேயே தங்கள் வேலையைத் தொடங்கி விடுகிறார்கள்.

தொழிலாளர்கள் மகிழ்ச்சி

உற்பத்தி செய்யப்படும் உப்பு வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. ஒரு டன் உப்பு தற்போது ரூ.800க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் உப்பு வாரும் பணியில் தொழிலாளர்கள் காலை 5 மணி முதல் 10 மணி வரை ஈடுபடுகின்றனர். ஒரே நேரத்தில் அதிக அளவு உற்பத்தி நடைபெறுவதால் ஆள் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இருந்த பொழுதிலும் வேலை தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதால் இந்த தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.73½ லட்சத்துக்கு எள் ஏலம்

சிறுசேமிப்பு திட்டங்களின் முக்கியத்துவத்தை அறியச் வேண்டி தருணம் இது!

English Summary: Salt production intensifies in Vedaranyam! Workers happy with daily work
Published on: 12 April 2021, 06:30 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now